மும்பை அணி ஐபிஎல் கோப்பையை வென்றவுடன் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வுபெறுவதாக சச்சின் அறிவித்துள்ளார். அவர் காயம் காரணமாக இறுதி போட்டியிலும், அதற்கு முந்தைய சுற்றிலும் ஆடவில்லை. சச்சின் கூறும் போது, உலக கோப்பையை வெல்ல 21 ஆண்டுகள் காத்திருந்தேன். ஆனால் ஐபிஎல் கோப்பைக்கு 6 ஆண்டுகள் மட்டும் தான் காத்திருக்க வேண்டியிருந்தது. இது நான் சிறப்பு வாய்ந்ததாக கருதுகிறேன். இது தான் எனக்கு ஐபிஎல் போட்டியில் கடைசி போட்டியாகும். அடுத்த தொடரில் நான் விளையாட மாட்டேன் என அவர் தெரிவித்தார்.
|