LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

முழு பயன்பாட்டில் ஏவுகணை தாக்குதல் நடத்தும் நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ். அரிஹாண்ட் !

கடலுக்குள் இருந்து ஏவுகணை வீசும் திறன்படைந்த நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் அரிஹாண்ட் முழுமையான செயல்பாட்டுக்கு வந்தது.

கடலுக்குள் இருந்து ஏவுகணை வீசும் திறன் படைத்த நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்கும் திட்டம் கடந்த 30 ஆண்டுகளாக நடந்து வந்தது. இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஐ.என்.எஸ். அரிஹாண்ட் என்ற நீர்மூழ்கி கப்பல்கள் முழுமையான செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 

6 ஆயிரம் டன் எடையுள்ள இந்த நீர்மூழ்கி கப்பல் மூலம் கடலுக்குள் எந்த பகுதியிலிருந்து ஏவுகணை வீச முடியும். ஆழ்கடலில் மூழ்கியிருக்கும் இந்த கப்பலை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. எதிரி நாட்டின் கடற்கரையை நெருங்கி அங்கிருந்து ஏவுகணையை வீச முடியும். 

நிலத்தில் இருந்து ஏவப்படும் குறுகிய தூர ஏவுகணைகள் தாக்க முடியாத இலக்குகளை இந்த நீர்மூழ்கி கப்பல் மூலம் தகர்க்க முடியும். இந்த கப்பல் தனது முழுமையான ரோந்து பணியை வெற்றிகரமாக முடித்தது. 

ரோந்து பணியை நிறைவு செய்து ஐ.என்.எஸ். அரிஹாண்ட் நீர்மூழ்கி கப்பல் திரும்பும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். 

"அரிஹாண்ட் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல். இதனை உருவாக்கி இதற்கென பணியாற்றிய அனைத்து பிரிவினர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விடுத்துள்ள செய்தியில், 

‘‘நிலம் மற்றும் வானில் இருந்து அணு ஆயுதங்களை ஏவும் திறன் இந்தியாவுக்கு ஏற்கனவே உள்ளது. தற்போது கடலில் இருந்து அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறனை ஐஎன்எஸ் அரிஹாண்ட் நிறைவு செய்துள்ளது’’ என குறிப்பிட்டு உள்ளார்.

by Mani Bharathi   on 08 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.