|
|||||
பிரதமர் மோடி எழுதிய பாடலுக்கு பார்வையற்ற மாணவிகள் நடனம்! |
|||||
பிரதமர் மோடி 25 ஆண்டுகளுக்கு முன் எழுதிய பாடலுக்கு, குஜராத்தை சேர்ந்த பார்வையற்ற மாணவிகள் கர்பா நடனம் ஆடினர். பிரதமர் மோடி டுவிட்டரில் நவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார். நவராத்திரி விழா கொண்டாட்டம் குஜராத்தில் நடைபெற்று வருகிறது. உலகின் பல இடங்களில் உள்ள குஜராத் மக்களும் நவராத்திரி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொண்டாட்டத்தின் போது பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து கர்பா நடனம் ஆடி மகிழ்வார்கள். இது பற்றி பிரதமர் மோடி 25 ஆண்டுகளுக்கு முன் குஜராத்தி மொழியில் ஒரு பாடல் எழுதியுள்ளார். ‘கர்பா நடனம் உலகம் முழுவதையும் இணைக்கிறது. அளவில்லாத மகிழ்ச்சியை அளிக்கிறது. இயற்கையுடன் இணைய வைக்கிறது. கர்பா குஜராத்தின் வளம், கவுரவமான பாரம்பரியம், அடையாளம். ஏழை, பணக்காரர் அனைவருக்கும் கர்பா மகிழ்ச்சியை கொண்டு வருகிறது. மக்கள் நலத்தின் அடையாளமாக உள்ளது. கர்பா புல்லாங்குழல், மயில் இறகு போன்றது. கர்பா உண்மையானது, தாயின் அழகான குங்குமத்தைப் போன்றது, கர்பா என்றால் சக்தி, ஈடுபாடு’ இவ்வாறு பிரதமர் மோடி எழுதியுள்ளார். பிரதமர் எழுதிய, இந்த பாடலுக்கு குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ‘அந்த் கன்யா பிரகாஷ் கிரஹ்’ என்ற பார்வையற்ற பள்ளி மாணவிகள் கர்பா நடனம் ஆடினர். இந்த நடனத்தின் வீடியோவை பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டு நவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார் "இந்த நடனம் எனது மனதை தொட்டுள்ளது. கர்பா கொண்டாட்டத்துக்கு இந்த மகள்கள் உயிர் கொடுத்துள்ளனர். அனைவருக்கும் நவராத்திரி ஆசீர்வாதம் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்’’ எனக் குறிப்பிட்டு உள்ளார் |
|||||
by Mani Bharathi on 16 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|