ஆதார் அட்டையை செல் போன் எண் மற்றும் வங்கிக் கணக்குடன் இணைப்பது குறித்து நாடாளுமன்றத்தில் மீண்டும் சட்டம் கொண்டு வரப்படும் என அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.
டெல்லியில் நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்று அருண்ஜெட்லி பேசியதாவது:
வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் இந்தியாவில் குழப்பமான கூட்டணியை சோதிப்பதற்கான நேரம் இதுவல்ல. நடப்பு கணக்கு பற்றாக்குறையை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக நடப்பு நிதியாண்டின் கடன் இலக்கை ரூ.70,000 கோடியாக அரசு குறைத்துள்ளது.
மேலும் ஆதார் அட்டை என்பது குடிமக்கள் அட்டையல்ல. செல்போன் இணைப்புக்கு ஆதார் எண் கேட்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. ஆதார் அட்டையை செல்போன் எண் மற்றும் வங்கி கணக்கில் இணைப்பதை கட்டாயமாக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் மீண்டும் கொண்டு வரப்படும். அதை தவறாக பயன்படுத்தாத அளவுக்கு அதில் விதிகள் இருக்கும். இவ்வாறு அமைச்சர் அருண் ஜெட்லி பேசினார்.
|