LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை கடல் பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வை இந்திய அரசு மேற்கொள்ள திட்டம்

தமிழ்நாட்டின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரை 23 கி.மீ. கடல் பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வை இந்திய அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

இது தொடர்பான பேச்சுவார்த்தை இரு நாடுகளிடையே பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்தியா – இலங்கை இடையே ரயில் மற்றும் கப்பல் என ஒருங்கிணைந்த போக்குவரத்தை ஆங்கிலேயர்கள் காலத்தில் தொடங்கப்பட்டது.இந்தப் போக்குவரத்தானது தனுஷ்கோடி – இலங்கை தலைமன்னார் இடையே 24.02.1914-ல் தொடங்கி இரு நாடுகளுக்கும் சென்று வந்தனர்.

 

இதற்காக தனுஷ்கோடி, தலை மன்னார் துறைமுகங்களும் அமைக்கப்பட்டன.தனுஷ்கோடியிலிருந்து இலங்கை நாட்டின் தலைமன்னாருக்கு ஒரே பயணச்சீட்டில் கப்பல் பயணம் இருந்து வந்தது. ஆனால் 1964-ம் ஆண்டு புயலில் தனுஷ்கோடி முற்றிலும் நிலைகுலைந்தது. மேலும் இலங்கையில் நடைபெற்று வந்த நிலையில் உள்நாட்டுப் போரால் கப்பல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

 

பாலம் அமைக்க பேச்சுவார்த்தை

 

இந்நிலையில் இந்தியா இலங்கை இடையே மீண்டும் போக்குவரத்தைத் தொடங்குவதற்கு தரைவழிப்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததைத்தொடர்ந்து இந்தியா தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இதற்கு இலங்கை தரப்பில் ஒத்துழைப்பு இல்லை. எனவே இந்தப் பாலம் அமைக்கும் பணிகளுக்கான பேச்சுவார்த்தை தடைப்பட்டு வந்தது.

 

இவ்வாறு இருக்கக் கொரோனா காலகட்டத்தில் இலங்கை மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியைக் கண்டது. மேலும் இலங்கை அரசு தற்போது இந்திய அரசிடம் தரைவழிப்பாலம் அமைக்க ஒப்புதல் அளித்து பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்நிலையில் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் பகுதிக்கு தரைவழிப்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சாத்திய கூறுகள் அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும் என அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

இந்த தரைவழிப்பாலம் 23 கிமீ தொலைவில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த தரைவழிப்பாலம் அமைக்கச் சாத்தியம் இருக்கிறதா என்று பார்த்தால் தனுஷ்கோடியிலிருந்து இலங்கை வரை மொத்தம் 13 மணல் திட்டுகள் உள்ளன. ஒவ்வொன்றும் 1 கிமீ இடைவெளி கொண்டவை ஆகும். இந்த மணல் திட்டுகள் 6 வரை இந்தியாவுக்கு மீதமுள்ளவை இலங்கைக்கும் சொந்தமானவை. இந்தப் பகுதி முழுவதும் ஆழம் மிகவும் குறைவானதாகும். இதன் காரணமாக மணல் திட்டுகள் மீது பாலம் அமைக்கப்படலாம்.

by Kumar   on 23 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம். ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.