|
||||||||
தமிழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் பணி வாய்ப்பு !! |
||||||||
தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் தமிழ் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : பேராசிரியர், இணை பேராசிரியர்
காலியிடங்கள் உள்ள துறைகள்: மொழியியல் துறை, இலக்கியத் துறை, நாட்டுப்புறவியல் துறை, பழங்குடி மக்கள் ஆய்வுத்துறை, இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி, சிற்பத்துறை, ஓலைச் சுவடித் துறை, அரிய கையெழுத்துச் சுவடித்துறை, கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை, மொழி பெயர்ப்புத் துறை, அகராதியியல் துறை, அயல்நாட்டு தமிழ் கல்வித் துறை, அறிவியல், தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை, கட்டடக் கலைத் துறை, சமூக அறிவியல் துறை, சித்த மருத்துவத்துறை.
மொத்த காலிப் பணியிடங்கள் : 22
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.200. எஸ்,எஸ்டி பிரிவினருக்கு ரூ.100.
விண்ணப்பக்கட்டணம் செலுத்தும் முறை : பதிவாளர், தமிழ் பல்கலைக்கழகம் என்ற பெயரில் தஞ்சாவூரில் மாற்றத்தக்க வகையில் டி.டியாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :http://www.tamiluniversity.ac.in/download_pdfs/Academic%20Post%20Advertisement%20Qualifications%20Application%20PBAS%20Form.pdfஎன்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2013
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
பதிவாளர்,
தமிழ் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர். |
||||||||
by Swathi on 23 Dec 2013 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|