LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் மொழி

மக்களவையில் தமிழ்- வழியமைத்து கொடுத்த ஜெகஜீவன்ராம்!

மக்களவையில் எனக்கு 32 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் பேச வழியமைத்துக் கொடுத்த பாபு ஜெகஜீவன்ராமின் மகளான இப்போதைய மக்களவைத் தலைவர் மீரா குமார், மக்களவையில் தனது பணியில் தமிழ் மொழியைப் பயன்படுத்த மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு அனுமதி வழங்குவார் என்று நம்புகிறேன் என்று குமரி அனந்தன் கூறியுள்ளார்.

மூத்த காங்கிரஸ் தலைவரும் பனை வாரியத் தலைவருமான குமரி அனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மக்களவையில் தனது பணியில் தமிழ் மொழியைப் பயன்படுத்த மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, அவைத் தலைவர் மீரா குமாரிடம் அனுமதி கேட்டிருந்தார். இது தொடர்பாக அவைத் தலைவர் மீரா குமார் அமைச்சரை அழைத்து பேசப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது.

நான் 1977ம் ஆண்டில் நாகர்கோவில் மக்களவை தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது நான் தமிழில் கேள்வி கேட்டேன். ஆங்கிலம், இந்தியை தவிர வேறு மொழியில் கேள்வி எழுப்பாத காரணத்தால் என்னை அவையில் இருந்து பல முறை வெளியேற்றினர்.

நான் எடுத்த முடிவில் உறுதியாக நின்றதால் அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் பாபு ஜகஜீவன்ராம் தலைமையில் ஒரு மொழிக் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் என்னை விசாரணைக்கு அழைத்தார்கள்.

அப்போது, தமிழ் இந்திய நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றாகவும், தொன்மையானதாகவும், என் தாய் மொழியாகவும் இருப்பதால், தமிழில் கேள்வி கேட்கும் உரிமை வேண்டும் என்று சாட்சியம் அளித்தேன்.

அதன் பிறகு என் வேண்டுகோள் ஏற்கப்பட்டு, தமிழில் கேள்வி கேட்கும் உரிமை ஏற்கப்பட்டது. 1978ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி நான் தமிழில் கேள்வி கேட்க அது உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட்டது. அன்றைய விவசாயத்துறை அமைச்சராக இருந்த இப்போதைய தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா என் கேள்விக்கு பதில் அளித்தார்.

மக்களவை ஆவணக் குறிப்பேட்டில் குமரி அனந்தன் தமிழில் கேட்ட கேள்வி என்று குறிப்பிட்டு வெளியாகி உள்ளது. இதற்காக அப்போது கருணாநிதி என்னை பாராட்டினார்.

எனவே மு.க. அழகிரி தம் பணியை தமிழில் ஆற்ற, எனக்கு 32 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் பணியாற்ற வழியமைத்துக் கொடுத்த பாபு ஜெகஜீவன்ராமின் மகளான மக்களவைத் தலைவர் மீரா குமார் அனுமதி வழங்குவார் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் குமரி அனந்தன்.

by Swathi   on 02 Oct 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவைப் போற்றும் 'நடுகல்' திறப்பு விழா - அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை. தாய்லாந்தில் தமிழர்களின் நினைவைப் போற்றும் 'நடுகல்' திறப்பு விழா - அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை.
தமிழ் மாதங்கள் 12 அறிந்ததே. ஆனால், தமிழ் ஆண்டுகள் 60 தெரியுமா? தமிழ் மாதங்கள் 12 அறிந்ததே. ஆனால், தமிழ் ஆண்டுகள் 60 தெரியுமா?
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.