நாம் வாழும் காலத்தில் உடலையும் மனத்தையும் சரிப்படுத்திக் கொண்டால் நமக்குப் பின்னாலே பிறக்கக் கூடிய குழந்தைகள் எப்படியிருக்கும் என்று பார்த்தீர்களானால் அவை ஆரோக்கியமான கட்டமைப்பு (Structure) கொண்டதாகத் திகழும். அவ்வாறு நல்ல குழந்தைகளை உலகுக்குத் தருவதற்கு நமது உடற்பயிற்சி, தியானமுறை இரண்டும் வாய்ப்பு அளிக்கும். அவற்றின் மதிப்பை உணர்ந்து நீங்கள் முறையாகச் செய்ய வேண்டும். வேலைப்பளு அதிகரிக்கும் போது, ஊதியம் தராத உடற்பயிற்சி, தியானம் இவற்றை முதலில் நிறுத்தி விடலாம் என்று எண்ணாது, உள்ளுர இயங்கி வரும் இறைச்சக்திக்கு தொண்டு செய்யும் வகையிலே உடற்பயிற்சி, உளப்பயிற்சி, செய்து நாளுக்குநாள் மகிழ்ச்சியும் இனிமையும் பெற்று வாழ வேண்டும். உடலுக்குக் கொடுக்கக்கூடிய உடற்பயிற்சி, மனதிற்குக் கொடுக்கக்கூடிய தியானப்பயிற்சி, உயிர்க்கு உறுதி அளிக்கும் காயகல்பப் பயிற்சி இம்மூன்றும் உடலையும், உள்ளத்தையும், உயிரையும் மேன்மைப்படுத்தி, தூய்மைப்படுத்தி மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி வகுபனவாகும்.
|