சதுர்த்தி என்பது முழுமுதல் கடவுள் விநாயகருக்கு உரிய திதி. ஒவ்வொரு மாதமும் இரண்டு சதுர்த்தி திதிகள் வரும். அமாவாசைக்குப் பிறகு நான்காம் நாள் வருவது வளர்பிறையில் வரும் சதுர்த்தி. பௌர்ணமிக்குப் பிறகு நான்காம் நாள் வருவது தேய்பிறையில் வரும் சதுர்த்தி. தேய்பிறையில் வரும் சதுர்த்தியே சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. கணபதியின் 32 உருவங்களில் சங்கடஹர கணபதியும் ஒன்று. இந்தத் திதி நாளில் விரதமிருந்து மாலை சந்திரன் உதயமானதும் சங்கடஹர கணபதிக்கு அபிஷேகமும் அர்ச்சனையும் செய்து விநாயகர் அகவல் அல்லது கணேஷ பஞ்ச ரத்னம் ஆகியவற்றை படித்து விநாயகரைப் பிரார்த்தனை செய்தால் நம் வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கும். நாம் செய்யும் முயற்சிகள் வெற்றியாகும்.
ஜூலை மாதம் 6- ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 05. 42 க்கு சதுர்த்தி திதி ஆரம்பமாகிறது. எனவே அன்று மாலையே கணபதியை வணங்கி நம் சங்கடங்களை அகற்றுவோம். நல்வளங்கள் பெறுவோம்!
|