|
||||||||
பிரவரி 21 : உலக தாய்மொழி நாள் !! |
||||||||
யுனெஸ்கோ அமைப்பு கடந்த 2000ம் ஆண்டு முதல் பிப்ரவரி 21-ம் தேதியை உலக தாய்மொழி நாளாக அறிவித்தது. அதன்படி தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிறது. உலகில் 6 ஆயிரம் மொழிகள் உள்ளன. இதில் 1,500 மொழிகள் ஆயிரம் பேருக்கு கீழ் பேசுபவை. 3 ஆயிரம் மொழிகள் பத்தாயிரம் பேருக்கும் குறைவானோர் பேசுபவை. உலகில் பல நாடுகளில் தமிழ்பேசுபவர்கள் உள்ளனர். தமிழ்மொழியை சுமார் 7 கோடி பேர் பேசுகின்றனர். நாளுக்கு நாள் தாய்மொழிகள் மருகி அழிகிறது. தாய்மொழிகள் அழிவதை தடுக்கத்தான் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஒருவருக்கு ஒருவர் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள பேசப்பட்ட மொழி, இனத்தின் அடையாளமாக மாறியது. மொழியானது நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், சமூகத்துக்கு சமூகம் மாறுபடுகிறது. மொழிகள் பொது மொழி, தாய்மொழி என இரண்டு வகைப்படும். 100 ஆண்டுகளுக்கு முன் 6,200 ஆக இருந்த மொழிகள், இன்று, 3,000மாக குறைந்துள்ளதாக மொழியியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். இந்தியாவில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு,பெங்காளி, மலையாளம், கர்நாடகம் உள்ளிட்ட, 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக உள்ளன. எந்த மொழியையும் அழிக்கக் கூடாது.”ஒருவர் பல மொழிகளை தெரிந்து கொள்ளவும், வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்ளவும், மொழிபெயர்ப்பு மூலம் அமைதியை உருவாக்கவும்’ இத்தினம் வலியுறுத்துகிறது. தமிழை தாய்மொழியாக கொண்ட, தமிழகத்தில், தமிழ் எழுத்துக்களை கூட, மாணவர்களால், வாசிக்க முடியாத நிலையில் இருக்கின்றனர் எனில், நம் தாய்மொழி பற்று குறித்த கேள்வி எழுகிறது. மொழியை அறிதல் வேறு; அறிவை வளர்த்தல் வேறு. பள்ளி கல்விமுறை தாய்த்தமிழுக்கு உரிய இடத்தை கொடுக்க தவறிவிட்டது “தாய் மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றது’ என்பது மூதுரை. கண்ணாடிகளுக்காக கண்ணை இழக்காமல் வாழ்வது குறித்து, வளரும் தலைமுறைக்கு வழிகாட்டுவோம். தமிழ் அடையாளம் காப்போம்! ஒன்றிணைந்து உயர்வோம்! |
||||||||
by Swathi on 21 Feb 2014 0 Comments | ||||||||
Tags: Mother Language Day Mother Tongue Language Language தாய்மொழி தாய் மொழி தினம் | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|