சந்தானம் ஹீரோவாக நடித்து கடந்த சனிக்கிழமை வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படம் தமிழகம் முழுவதும் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.
இதனால் மகிழ்ச்சியில் உள்ள சந்தானம் தமிழகத்திலுள்ள முக்கிய தியேட்டர்களுக்கு நாயகி ஆஷ்னாவுடன் இணைந்து விசிட் போகப்போகிறாராம்.
ரசிகர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டும்போது தனது நடிப்பு குறித்த நேரடி கருத்துக்களையும் சேகரிக்க உள்ளாராம். இதற்கிடையே, இப்படத்தை தயாரித்துள்ள பிவிபி நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்கவும் இப்போது சந்தானத்துககு அட்வான்ஸ் கொடுத்துள்ளார்களாம்.
இதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் தியேட்டர் விசிட்டுக்கு செல்ல தயாராகி விட்டார் கலக்கல் கதாநாயகன் சந்தானம்.
|