LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சாய்பாபாவின் 100 வது சமாதி தினம்: ஷீரடியில் பிரதமர் வழிபாடு!

சாய்பாபாவின் 100வது சமாதி தினத்தை முன்னிட்டு ஷீரடியில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். 

உலகப் புகழ் பெற்ற ஷீரடி சாய்பாபா கோயிலில் விஜயதசமி தினத்தன்று சாய்பாபாவின் மகா சமாதி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மிக எளிமையாக வாழ்ந்து முக்தி பெற்ற சாய்பாபா 1918ம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று ஜீவ சமாதி நிலையை அடைந்தார்.

இந்நிலையில் அவர் சமாதி அடைந்து நூறு ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து நாடு முழுவதும் உள்ள சாய்பாபா கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

குறிப்பாக லட்சக்கணக்கான பக்தர்கள் ஷீரடியில் குவிந்து வருகின்றனர். இதற்காக அக்டோபர் 1ம் தேதியில் இருந்தே சிறப்பு பூஜைகள், தரிசன ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த பூஜைகளில் கலந்துகொள்ள நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஷீரடியில் குவிந்து வருகின்றனர். 

எனவே சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் சுமார் 500 சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

சாய்பாபா கோவில் நிர்வாகத்தை கவனிக்கும் வகையில் 1922ம் ஆண்டு 3200 ரூபாயில் ஷீரடி டிரஸ்ட் தொடங்கப்பட்டது. தற்போது இந்த டிரஸ்டின் வருமானம் ரூ.371 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. 

சாய்பாபாவின் 100வது ஆண்டு சமாதி தினத்தை முன்னிட்டு, ஷீரடி - விஜயவாடா, ஷீரடி - ராஜமுந்திரி இடையே சிறிய ரக விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஷீரடிக்கு வருகை தந்த பிரதமர் மோடி அங்கு தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் தங்குவதற்காக புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

by Mani Bharathi   on 19 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.