இன்று சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பாரதரத்னா விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், விளையாட்டு துறையில் முதன் முதலாக பாரத ரத்னா விருது பெற்றவர் என்ற பெருமையை சச்சின் பெறவுள்ளார். மேலும் சச்சினுடன், வேளாண் விஞ்ஞானி சி.என்.ஆர்.,ராவ் என்பவருக்கும் இந்த பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
|