ஒரு படத்தில் இரண்டு கதைகள். இடைவேளை முன்பு ஒரு கதை. இடைவேளைக்கு பிறகு ஒரு கதை.
இதில் ஒரு கதையில் 75 வயது வாலிபனின் காதல் தேடுதலையும் அவனுடைய இளைமைக் கால சேட்டைகளையும், குறும்புகளையும் காதல் விளையாட்டுகளையும் பதிவு செய்திருக்கிறோம். இதில் 75 வயது வாலிபனாக முதன் முறையாக ஒரு முழு கதாபாத்திரத்தில் S.A.சந்திரசேகரன் நடிக்கிறார். அதில் சிம்லாவை சேர்ந்த ஹேமமாலினி என்ற அழகு தேவதை அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த கதை முழுக்க முழுக்க சிம்லாவிலும், ராஜஸ்தானிலும் நடந்து முடிந்திருக்கிறது.
மேலும் அபிசரவணன், அஷ்வின், கல்கத்தா நடிகை பாப்ரி கோஷ், மனோபாலா, இயக்குனர் A.வெங்கடேஷ், ரோபோ சங்கர், சாய் கோபி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு பல தேசிய விருதுகளை வாங்கிய இசைஞானி இளையராஜாவும், அதேபோல் பல தேசிய விருதுகளை வாங்கிய எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தும் ஒன்றாக இணைந்திருப்பது இப்படத்தின் சிறப்பம்சமாகும்.
இப்படத்தில் எடிட்டர் ரெஜீஷும் பணிபுரிந்துரிக்கிறார், ஒளிப்பதிவு அருண்பிரசாத், பிரதீபன், கலை வனராஜ். படப்பிடிப்பு முடிந்து ரீ-ரெக்கார்டிங் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த திரைப்படம் எஸ்.ஏ.சந்திரசேகரனின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக இருக்குமென்று நம்புகிறார்.
|