LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

"சிறைச்சாலைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்" சுப்ரீம் கோர்ட் உத்தரவு

"சிறைச்சாலையில் சீர்த்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என சுப்ரீம் கோர்ட்  உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள சிறைச் சாலைகளில் மனிதாபிமானமற்ற நிலைமைகள் ஏற்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டுமென தொடுக்கப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது.

நீதிபதி மதன் பி. லோகுர், நீதிபதி எஸ்.அல்பல் நசீர் மற்றும் நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரித்தது.

இவ்வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு வருமாறு:
நாடு முழுவதும் உள்ள 1,382 சிறைச்சாலைகளில் மனிதாபிமானமற்ற நிலைமைகள் தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.  கைதிகளை விலங்குகளைப் போல் நடத்த எந்த வகையிலும் அனுமதிப்பதற்கு இல்லை. சிறைச்சாலைகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைக் கண்காணித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள ஒரு குழுவை இந்த நீதிமன்றம் பரிந்துரைக்கிறது.

இந்தக் குழுவில் முன்னாள் நீதிபதிகள் மூவர் இடம்பெற வேண்டும். இவர்கள் தலைமையில் நாடு முழுவதும் உள்ள சிறைச் சாலைகள் கண்காணிக்கப்பட  வேண்டும். அதன்பேரில் சிறைச்சாலைகளில் செய்யப்பட வேண்டிய சீர்த்திருத்தங்கள் குறித்து இந்தக் குழு தெரிவிக்க வேண்டும்.

இதில், சிறைச்சாலைகளில் ஏற்படும் இடநெருக்கடி, கைதிகள் அதிகரிப்பு மற்றும் பெண் கைதிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் அக்கறையோடு இந்தக்குழு ஆய்வுசெய்ய  வேண்டும். சிறைச்சாலைகளில் அனைத்து கைதிகளுக்கும் ஏற்படும் பல்வேறு விதமான சிக்கல்களை தொடர்ந்து கவனித்து தீர்வு காணும் விதமாக உடனுக்குடன் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறுசுப்ரீம் கோர்ட் மூவர் நீதிபதிகள் அமர்வு தமது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது.

by Mani Bharathi   on 28 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.