|
||||||||
சுண்டைக்காய் வற்றல் (Turkey Berry Vathal) |
||||||||
தேவையானவை : சுண்டைக்காய் - அரை கிலோ, மோர் - 2 லிட்டர், உப்பு - 1 டேபிள் ஸ்பூன். செய்முறை : 1. முதலில் சுண்டைக்காயை நன்றாக கழுவி கத்தியால் கொஞ்சமாக வெட்டிக் கொள்ளவும். அதை கொதிக்கும் நீரில் போட்டு மூடி, 5 நிமிடம் கழித்து, நீரை வடித்து வைக்கவும். மோரில் உப்பை கலந்து சுண்டைக்காயை மோரில் போட்டு ஊற வைக்கவும். மறுநாள் மோரிலிருந்து காயை கரண்டியால் அரித்தெடுத்து வெயிலில் காய வைக்கவும். 2.மோரையும் தனியே வெயிலில் வைக்கவும். மாலையில் திரும்ப காயை மோருக்குள் போட்டு கலக்கி மூடி வைக்கவும். மோர் வற்றும் வரை திரும்பத் திரும்ப இதே போல் செய்யவும். 4 நாட்களில் மோர் முழுவதும் வற்றி விடும்.வற்றல் நன்கு காயும் வரை வெயிலில் வைத்து எடுக்கவும். |
||||||||
by kanika on 12 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|