|
||||||||
கருணைக்கிழங்கு மசியல் (karunai kilangu masiyal) |
||||||||
தேவையானவை: பிடி கருணைக் கிழங்கு - 5 சின்னவெங்காயம் – 50 கிராம் தக்காளி - 2 சாம்பார் பொடி - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை நல்லெண்ணை - 1 டேபிள்ஸ்பூன் கடுகு, உளுந்து தாளிக்க கறிவேப்பிலை – ஒரு கொத்து உப்பு - 1 டீஸ்பூன் செய்முறை: 1.கருணைக் கிழங்கை குக்கரிலும் வேக வைத்து கிழங்கின் தோலை உறித்து நன்றாக மசித்து வைக்கவும். 2.பின்னர் கடாயியை அடுப்பில் வைத்து நல்லெண்ணை ஊற்றி கடுகு உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். 3.பின்பு வெங்காயம் போட்டு வதக்கவும். அதனுடன் தக்காளி போட்டு நன்கு வதக்கவும். 4.பின்னர் சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வதக்கவும். 5.அந்த கலவையில் மசித்து வைத்துள்ள கருணைக் கிழங்கினை போட்டு நன்றாக பிரட்டவும். |
||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|