ஆறாவது ஐ.பி.எல் தொடரின் நேற்று நடைபெற்ற ப்ளே ஆப் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை எடுத்தது.பின்னர் 133 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கோப்பை வெல்லும் கனவு தகர்ந்தது.
|