நான்கு வருட இடைவெளிக்கு பிறகு காமெடி நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் படம் 49 ஓ.
தஞ்சை மாவட்டத்தை களமாகக்கொண்டு உருவாக்கி வரும் இந்த படத்தில் கவுண்டமணி விவசாயியாக நடித்துள்ளார்.
காமெடி நடிகர் என்றாலும் கதைக்கு ஏற்ப சீரியசாகவே நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் மனிதனின் வாழ்க்கையில் மழையின் இன்றியமையாமை குறித்து ஒரு பாடலும் பாடி நடித்துள்ளாராம் கவுண்டமணி.
"அம்மா போல அள்ளித்தரும் மழைதான், அவ ஆதாரமா நின்னா இல்லை குறைதான்" எனத் தொடங்கும் இந்த பாடல் பார்த்தால், விவசாயிகளின் கண்களிலும் ஈரம் கசிந்து விடுமாம். மேலும் இந்த பாடல் காரணமாக படத்துக்கு வரிவிலக்கு கிடைக்கும் என்றுகூட எதிபார்க்கப்படுகிறது.
|