LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ரயில்வேயில் புதிதாக 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு- அமைச்சர் பியூஸ் கோயல் அறிவிப்பு!

ரயில்வேயில் புதிதாக இரண்டு லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க உள்ளதாக பியூஸ் கோயல் தகவல் அளித்துள்ளார்.

காலியாக உள்ள 2 லட்சத்து 82 ஆயிரம் இடங்கள் மற்றும் ஓய்வு பெறும் ஊழியர்கள் கணக்கின்படி மொத்தம் 4 லட்சம் பேர் 2021ம் ஆண்டில் ரயில்வேயில் பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ரயில்வேயில் ஏற்கனவே 1 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அடுத்த 2 ஆண்டுகளில் 2 லட்சத்து 30 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறி உள்ளார். இதில் 1 லட்சத்து 31 ஆயிரம் பணியிடங்களுக்கான அறிவிப்பு அடுத்த 2 மாதங்களுக்குள் வெளியிடப்பட்டும் என்றும், ஓராண்டுக்குள் பணிநியமனம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

மேலும் 91 ஆயிரம் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு மே மாதம் வெளியிடப்படும் என்றும், இந்த பணியிடங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு 34 ஆயிரம் இடங்களும், பழங்குடியினருக்கு 17 ஆயிரம் இடங்களும், பிற்படுத்தப்பட்டோருக்கு 62 ஆயிரம் இடங்களும் ஒதுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான 10 சதவிகித நடைமுறையின் கீழ் முதல் முறையாக 23 ஆயிரம் பணியிடங்கள் ஒதுக்கப்படும் என்று பியூஸ் கோயல் தெரிவித்து உள்ளார். 

அடுத்தடுத்து ரயில்வேயில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் சுமார் 4 லட்சம் பேர் ரயில்வேயில் வேலை வாய்ப்பு பெற உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார். 

இதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ஓடும் 22 முக்கிய ரயில்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளதாகவும் பியூஸ் கோயல் கூறி உள்ளார்.  

by Mani Bharathi   on 25 Jan 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.