|
|||||
ரயில்களில் தானியங்கி கதவுகளை அமைக்க ரயில்வே நிர்வாகம் ஆலோசனை !!! |
|||||
ஓடும் ரயில்களில், பயணிகள் தவறி விழுவதை தடுத்து நிறுத்த, தானியங்கி கதவுகள் அமைக்க வலியுறுத்தி, அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் ஒரு பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், ரயில்களில் தானியங்கி கதவுகளை அமைக்க, ரயில்வே துறைக்கு உத்தரவிட்டது. இதனை அடுத்து ரயில்வே துறை, உயர்நீதி மன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. உச்ச நீதி மன்றமும், பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பையே வழங்கியது.
நீதி மன்றத்தின் தீர்ப்பின் படி, ரயில்களில் தானியங்கி கதவுகளை அமைப்பது குறித்து, ரயில்வே அதிகாரிகளின் கூட்டம், கடந்த வாரம் நடைபெற்றது. இதில், குறிப்பிட்ட சில ரயில்களில், ஏசி வகுப்பு பெட்டிகளில் மட்டும், தானியங்கி கதவுகளை அமைப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. இவ்வாறு, ஏசி பெட்டிகளில் அமைக்கப்படும் தானியங்கி கதவுகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் பொறுப்பு, ரயில் ஓட்டுனர் அல்லது குறிப்பிட்ட பெட்டியில் உள்ள காப்பாளர் வசம் இருக்கும். தானியங்கி கதவுள்ள பெட்டிகளில் உள்ள கதவுகள், ரயில்வே ஸ்டேஷன்களுக்கு ரயில் வந்து சேர்ந்ததும் திறந்து கொள்ளும், ஸ்டேஷனிலிருந்து புறப்பட்டதும் தானாக மூடிக்கொள்ளும்.
சோதனை முயற்சியாக, கபூர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில், 20 ஏசி பெட்டிகளில் தானியங்கி கதவு வசதியுடன் வடிவமைக்கப்பட உள்ளன. துவக்கமாக, டில்லி மண்டலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு அதன் வெற்றியை தொடர்ந்து, படிப்படியாக, அனைத்துமுக்கிய ரயில்களில் அமல்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூடத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஓடும் ரயில்களில், பயணிகள் தவறி விழுவதை தடுத்து நிறுத்த, தானியங்கி கதவுகள் அமைக்க வலியுறுத்தி, அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் ஒரு பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், ரயில்களில் தானியங்கி கதவுகளை அமைக்க, ரயில்வே துறைக்கு உத்தரவிட்டது. இதனை அடுத்து ரயில்வே துறை, உயர்நீதி மன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. உச்ச நீதி மன்றமும், பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பையே வழங்கியது.
நீதி மன்றத்தின் தீர்ப்பின் படி, ரயில்களில் தானியங்கி கதவுகளை அமைப்பது குறித்து, ரயில்வே அதிகாரிகளின் கூட்டம், கடந்த வாரம் நடைபெற்றது. இதில், குறிப்பிட்ட சில ரயில்களில், ஏசி வகுப்பு பெட்டிகளில் மட்டும், தானியங்கி கதவுகளை அமைப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. இவ்வாறு, ஏசி பெட்டிகளில் அமைக்கப்படும் தானியங்கி கதவுகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் பொறுப்பு, ரயில் ஓட்டுனர் அல்லது குறிப்பிட்ட பெட்டியில் உள்ள காப்பாளர் வசம் இருக்கும். தானியங்கி கதவுள்ள பெட்டிகளில் உள்ள கதவுகள், ரயில்வே ஸ்டேஷன்களுக்கு ரயில் வந்து சேர்ந்ததும் திறந்து கொள்ளும், ஸ்டேஷனிலிருந்து புறப்பட்டதும் தானாக மூடிக்கொள்ளும்.
சோதனை முயற்சியாக, கபூர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில், 20 ஏசி பெட்டிகளில் தானியங்கி கதவு வசதியுடன் வடிவமைக்கப்பட உள்ளன. துவக்கமாக, டில்லி மண்டலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு அதன் வெற்றியை தொடர்ந்து, படிப்படியாக, அனைத்துமுக்கிய ரயில்களில் அமல்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூடத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
|
|||||
by Swathi on 22 Sep 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|