LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சபரிமலையை கலவர பூமியாக்க நாங்கள் விரும்பவில்லை- கேரள தேவசம் போர்டு அமைச்சர் பேட்டி!

சபரிமலையை கலவர பூமியாக்க நாங்கள் விரும்பவில்லை என்று கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பைத் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்று, பக்தர்களால் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். 

இந்தச் சூழலில் சபரிமலை குறித்து செய்தி சேகரிப்பதற்காக பெண் நிருபர்கள் செல்ல முயன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து பெரும் புயலை கிளப்பி உள்ளன. 

இதில் முதலில் முயற்சி செய்தவர் சுகாசினி ராஜ் (38). டெல்லியை சேர்ந்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் மூத்த பெண் நிருபரான சுகாசினிராஜ் (38) தனது நண்பருடன்  சன்னிதானத்துக்கு செல்ல முயன்றார். அவருடன் போலீசாரும் பாதுகாப்பாக சென்றனர். ஆனால் மரக்கூட்டம் பகுதியில் வைத்து பக்தர்கள் திரண்டு அவரை முற்றுகையிட்டனர். தரிசனம் முடித்து வந்த பக்தர்களும், தரிசனத்துக்கு சென்று கொண்டு இருந்த பக்தர்களும் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இது குறித்து கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது: 

‘‘சபரிமலைக்கு பக்தியுடன் வரும் யாராக இருந்தாலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். ஆனால் கடந்த சில தினங்களாக சவால் விட்டுக்கொண்டு சில பெண் இயக்கவாதிகள் தான் வருகின்றனர். போலீஸ் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து சன்னிதானத்துக்கு அழைத்து சென்றது தவறு. 

பேஸ்புக், வாட்ஸ்அப் என சமூக வலைத்தளங்களில் சவால் விட்டுக்கொண்டு யாரும் சபரிமலைக்கு வர முயற்சிக்க கூடாது. சபரிமலையை கலவர பூமியாக்க நாங்கள் விரும்பவில்லை’’ 

இவ்வாறு அவர் கூறினார்.

by Mani Bharathi   on 20 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.