LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

உலக சாம்பியனை வீழ்த்தி தரவரிசையில் இந்தியாவின் நம்பர் ஒன் வீரரானார் பிரக்ஞானந்தா

நெதர்லாந்து நாட்டில் உள்ள விஜ்க் ஆன் ஜீ நகரில் டாடா ஸ்டீல் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

 

 இதன் 4-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனுடன் மோதினார்.

 

சாதனையை படைத்துள்ளார் 

 

இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 62- வது காய் நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இதன் மூலம் நடப்பு சாம்பியனை வீழ்த்திய 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் 18 வயதான பிரக்ஞானந்தா.

 

இதற்கு முன்னர் இந்த சாதனையை 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் நிகழ்த்தியிருந்தார். டிங் லிரனை வீழ்த்திய பிரக்ஞானந்தா, சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (ஃபிடே) லைவ் ரேட்டிங்கில் 2 இடங்கள் முன்னேறியதுடன் 2748.3 புள்ளிகளுடன் இரு இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை பிடித்துள்ளார்.

 

 அதேவேளையில் விஸ்வநாதன் ஆனந்த் 2748 புள்ளிகளுடன் ஒரு இடம் பின்தங்கி 12-வது இடத்தில் உள்ளார். இதன் மூலம் இந்தியாவின் நம்பர் ஒன் வீரராக உருவெடுத்துள்ளார் பிரக்ஞானந்தா.

 

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே இலக்கு.

 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரேட்டிங் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் தற்போது 2721.3 புள்ளிகளுடன் 27-வது இடத்தில் உள்ளார். 13 சுற்றுகள் கொண்ட டாடா ஸ்டீல் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா 2.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

 

டிங் லிரனை வீழ்த்தியது குறித்து பிரக்ஞானந்தா கூறும்போது, “வெற்றி பெற்றது நன்றாக இருக்கிறது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அழுத்தம் கொடுத்தேன். ஒரு கட்டத்தில் எந்த வித ஆபத்தும் இல்லாமல் ஆட்டம் நகர்வதை கவனித்தேன். கருப்பு நிற காய்களுடன் விளையாடியது கூடுதல் போனஸ். இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எனது தனிப்பட்ட இலக்கு.

by Kumar   on 17 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம். ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.