செல்போன், டேப்லெட் போன்ற மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய பல்வேறு உபகரணங்கள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் தற்போது, மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்யும் தலையணை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த, இரு நிபுணர்கள், இந்த சார்ஜ் செய்யும் தலையணையை வடிவமைத்துள்ளனர். இந்த தலையணைக்கு பவர் பில்லோ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
பவர் பில்லோவை சோபா மற்றும் படுக்கையில் வைத்துக்கொள்ளலாம். இதனைக்கொண்டு லேப்டாப், மொபைல் போன், டேப்லெட் போன்ற மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்யலாம். இந்த தலையணையில், யு.எஸ்.பி., லித்தியம்பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, முக்கியமான பணி நேரங்களில், மொபைல் போன் மற்றும் லேப்டாப்பை, நம் வேலைகள் பாதிக்காமல், சார்ஜ் செய்ய முடியும் என இதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
|