|
|||||
குழந்தைகள் நல மருத்துவர் சாய் லட்சுமி காலமானார் |
|||||
மருத்துவச் சேவைக்காக எக்ஸாம்(EXAM) என்ற அறக்கட்டளையைத் தொடங்கி சேவை செய்து வந்த மருத்துவர் சாய்லட்சமி காலமானார். அவருக்கு வயது 49. 2009ம் ஆண்டு அறக்கட்டளை தொடங்கி மகப்பேறு, குழந்தைகள் ஆகிய பிரிவுகளில் மருத்துவர் சாய் லட்சுமி சேவை செய்து வந்தார். மருத்துவசதிபெற பணமின்றி ஒரு குழந்தைகூட பாதிக்கக்கூடாது எனப் பணியா£ற்றிய அவரது அரசு சாரா அமைப்பு குறுகிய காலத்தில் உலக அளவில் லாப நோக்கமற்ற தொண்டு நிறுவனமாகப் பெயர்பெற்றது. இந்நிலையில், நீண்டநாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சாய் லட்சுமி 16/12/2023 ம் தேதி காலமானார்.
**************************************************
பல விருதுகளைப் பெற்றவர்
*************************************
பல லட்சம் குழந்தைகள் , கர்ப்பிணிப்பெண்களின் ஊட்டச்சத்து , நலனுக்குத் தொண்டாற்றியவர் சாய் லட்சுமி. அமெரிக்காவில் வசித்தவர் , அதை விட்டுவிட்டு கிராமப்புற மக்களுக்குக் குறிப்பாகக் கிராமப்புறப் பெண்கள், குழந்தைகளுக்கு உடல்நலம் சார்ந்த சிக்கல்களுக்குத் தீர்வுகாண இந்தியா வந்து தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் மிக ஆழமாக மாவட்ட அளவில் அலுவலகம் அமைத்து , முழு நேர ஊழியர்களை நியமித்துச் சேவையாற்றினார்.
********************************
குடியரசுத் தலைவர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். பல அரசுகள் அழைத்து இவரின் சேவையை விரிவாக்கக் கேட்டன.
மருத்துவச் சேவைக்காக எக்ஸாம்(EXAM) என்ற அறக்கட்டளையைத் தொடங்கி சேவை செய்து வந்த மருத்துவர் சாய்லட்சமி காலமானார். அவருக்கு வயது 49. 2009ம் ஆண்டு அறக்கட்டளை தொடங்கி மகப்பேறு, குழந்தைகள் ஆகிய பிரிவுகளில் மருத்துவர் சாய் லட்சுமி சேவை செய்து வந்தார். மருத்துவசதிபெற பணமின்றி ஒரு குழந்தைகூட பாதிக்கக்கூடாது எனப் பணியா£ற்றிய அவரது அரசு சாரா அமைப்பு குறுகிய காலத்தில் உலக அளவில் லாப நோக்கமற்ற தொண்டு நிறுவனமாகப் பெயர்பெற்றது. இந்நிலையில், நீண்டநாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சாய் லட்சுமி 16/12/2023 ம் தேதி காலமானார். பல விருதுகளைப் பெற்றவர் பல லட்சம் குழந்தைகள் , கர்ப்பிணிப்பெண்களின் ஊட்டச்சத்து , நலனுக்குத் தொண்டாற்றியவர் சாய் லட்சுமி. அமெரிக்காவில் வசித்தவர் , அதை விட்டுவிட்டு கிராமப்புற மக்களுக்குக் குறிப்பாகக் கிராமப்புறப் பெண்கள், குழந்தைகளுக்கு உடல்நலம் சார்ந்த சிக்கல்களுக்குத் தீர்வுகாண இந்தியா வந்து தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் மிக ஆழமாக மாவட்ட அளவில் அலுவலகம் அமைத்து , முழு நேர ஊழியர்களை நியமித்துச் சேவையாற்றினார். குடியரசுத் தலைவர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். பல அரசுகள் அழைத்து இவரின் சேவையை விரிவாக்கக் கேட்டன.
|
|||||
by Kumar on 19 Dec 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|