|
|||||
படேல் சிலையை பிரதமர் திறந்து வைக்க பழங்குடியின மக்கள் எதிர்ப்பு! |
|||||
குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலையை வரும் 31ம் தேதி பிரதமர் மோடி திறந்துவைப்பதற்கு அப்பகுதி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். குஜராத் மாநிலத்தில் பிறந்த சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுகிறார். இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் மற்றும் முதல் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த இவர், சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவை ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியவர். இவருக்கு குஜராத்தில் சிலை வைக்க அம்மாநில முதல்வராக இருந்தபோது நரேந்திர மோடி திட்டமிட்டார். அதன்படி கடந்த 2013ம் ஆண்டு நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் சர்தார் சரோவர் டேமிலிருந்து 3.2 கி.மீ தூரத்தில் சாதுபெட் என்ற இடத்தில் சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார். இதையடுத்து ஒருமைப்பாட்டு சிலை என பெயர் சூட்டப்பட்டு, சுமார் 182 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்டமாக சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. தற்போது சிலை அமைக்கும் பணிகள் அனைத்தும் முடிந்து, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31ம் தேதி அவரது சிலையைத் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சிலையை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு அப்பகுதி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். வேலைவாய்ப்பு மற்றும் நில வசதிகள் செய்து தருவதாக மோடி அரசு கூறிய நிலையில், இதுவரை எந்தவொரு சமூகநலத்திட்டமும் தங்கள் பகுதியில் செயல்படுத்தப் படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் மோடி சிலையை திறந்தால் அந்த நாளை நாங்கள் துக்கதினமாக கடைபிடிப்போம் என்று நர்மதை ஆற்றங்கரை ஓரங்களில் உள்ள 72 ஊர்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் அறிவித்துள்ளனர். |
|||||
by Mani Bharathi on 22 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|