|
|||||
பாஸ்போர்ட் பெறுவது இனி எளிது; 543 தொகுதிகளிலும் சேவை மையங்கள்! |
|||||
''நாட்டில் உள்ள, 543 லோக்சபா தொகுதிகளிலும், பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த நடவடிக்கை மூலம், பாஸ்போர்ட் பெறுவதில் உள்ள பிரச்னை, இனி எளிதாகும். நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில், சர்வதேச பாஸ்போர்ட் சேவை மையத்தை, அவர் துவக்கி வைத்து, அவர் பேசியதாவது: நியூயார்க்கில், இந்திய துாதரகத்தில், இந்த நிகழ்ச்சியை துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவில் இருந்தாலும், வெளி நாடுகளில் இருந்தாலும், இந்தியர்கள் யாரும், தங்களின் பாஸ்போர்ட்களை பெறுவதில், எந்த சிக்கலையும் சந்திக்கக் கூடாது என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. பாஸ்போர்ட் சேவை திட்டம், இந்தியர்களின் நலனுக்காகவே ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்தி யாவில், 543 லோக்சபா தொகுதிகளிலும், பாஸ் போர்ட் சேவை மையங்களை திறக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள், இந்த மையங்கள் திறக்கப்பட்டு, மக்களுக்கு எளிதாக பாஸ்போர்ட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாஸ்போர்ட் தொடர்பான சேவைகள், கடந்த ஆண்டு, 19 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. பாஸ்போர்ட் கோரி, ஒரு மாதத்தில், 10 லட்சத்துக்கும் அதிகமான மனுக்கள் வந்தது, இதுவே முதல் முறை. பாஸ்போர்ட் சேவை திட்டத்தின் மூலம், ஆறு கோடிக்கும் அதிகமான பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. சேவைகளை மேம்படுத்த, வெளியுறவு அமைச்சகம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பாஸ்போர்ட் பெறுவதற்கான விதிகள் எளிமை ஆக்கப்பட்டுள்ளன. பாஸ்போர்ட்டை விரைவில் வழங்குவதில் இருந்த தடைகள் நீக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு தலைமை தபால் அலுவலகத்திலும், சேவை மையம் திறக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால், பாஸ்போர்ட் கேட்டு, நீண்ட தூரம் இனி யாரும் செல்ல வேண்டி இருக்காது. தற்போது, 236 தபால் அலுவலகங்களில், பாஸ்போர்ட் சேவை மையம் செயல்பட்டு வருகின்றன. அத்துடன்,36 பாஸ்போர்ட் அலுவலகங்கள், ஏற்கனவே உள்ள, 93 பாஸ்போர்ட் சேவை மையங்கள் என, 365 சேவை மையங்கள் மூலம், பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் கிளை தூதரகங்களில், பாஸ்போர்ட் சேவை மையங்கள் துவக்கவும், வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது . பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திலும், பாஸ்போர்ட் சேவை மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினர். |
|||||
by Mani Bharathi on 25 Nov 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|