கடந்த 1986ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான ஊமை விழிகள் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் இயக்குனர் அரவிந்த்ராஜ்.
ஊமை விழிகளை தொடர்ந்து, உழவன் மகன், தாய்நாடு, சத்தியவாக்கு, தங்க பாப்பா, கருப்பு நிலா, முஸ்தபா, இரண்டு முகம் போன்ற படங்களை இயக்கினார்.
இவர், தற்போது கவிதை எனறொரு படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அவரது மகள் மகாகீர்த்தி, கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் படபிடிப்பு பெரியப்பெரிய மாட மாளிகைகளில் எடுக்கப்பட வில்லையாம், மாறாக படம் 6 சதுர அடி நீளமும், 3 சதுர அடி அகலமும், 2 அடி உயரமும் கொண்ட குறுகிய இடத்தில் படமாக்கப்படடுள்ளதாம்.
ஸ்பை என்ற மிகச்சிறிய கேமரா, ஒன்றரை அடி நீளமுள்ள டியூப் லைட் மற்றும் 2 டார்ச்லைட் வெளிச்சத்தில்தான் முழுக்க முழுக்க கவிதை படத்தை படமாக்கியிருக்கிறார்.
கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு பாடல்களையும் எழுதியிருக்கிறாராம் அரவிந்த்ராஜ்.
|