பாகிஸ்தான், சீன ராணுவத்தை தொடர்ந்து, இந்திய எல்லை பகுதியில், மியான்மர் ராணுவமும் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய-மியான்மர் எல்லையில் உள்ள சாண்டெல் மாவட்டத்தில், கடந்த 22-ஆம் தேதியே, நுழைந்த மியான்மர் ராணுவத்தினர் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை ஊடுருவி அங்கு தற்காலிக முகாம்கள் அமைத்து தங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மணிப்பூர் ஆளுநர் அஸ்வினி குமார் எல்லைப் பகுதியை பார்வையிட்டு திரும்பி இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மியான்மர் ராணுவத்தின் ஊடுருவலைத் தொடர்ந்து எல்லைப்பகுதியில் அசாம் ரைபிள் படையின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.
|