LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

நிபா எதிரொலி: கோழிக்கோட்டில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் (செப்.24) வரை அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் தொற்று எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பயிற்சி மையங்கள் என அனைத்துக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-------------------------------------
தற்போதைய நிலவரப்படி நிபா பாதிப்பு 1,080 ஆக உள்ளது. இவர்களில் 327 பேர் சுகாதாரப் பணியாளர்கள் ஆவர். கோழிக்கோட்டை தவிர அண்டை மாவட்டங்களான மலப்புரம், கண்ணூர், திரிசூர், வயநாட்டிலும் நிபா தொற்று பரவியுள்ளது.
-----------------------
முன்னதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குநர் ராஜீவ் பாஹல் அளித்தப் பேட்டியில், "நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களிடையே இறப்பு விகிதம் மிகவும் அதிகமாக இருக்கிறது. கரோனா வைரஸ் பாதிப்பில் இறப்பு விகிதம் 2 சதவீதம் முதல் 3 சதவீதம் என்றால் நிபா வைரஸ் பாதிப்பில் இறப்பு விகிதம் 40 சதவீதம் முதல் 70 சதவீதம் ஆக உள்ளது. மேலும், கடந்த 2018-ம் ஆண்டு நிபா வைரஸ் தாக்கியபோது அது வவ்வால்கள் மூலமாகவே பரவியது என்பதை நாங்கள் உறுதி செய்தோம். ஆனால் இப்போது வைரஸ் பரவலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. பொதுவாகவே மழைப்பருவத்தில் இந்த நோய் அதிகம் பரவுகிறது. கடந்த முறை ஆஸ்திரேலியாவில் இருந்து 'மோனோகுளோனல் ஆன்டிபாடி' மருந்தை கொள்முதல் செய்திருந்தோம். தற்போது, அந்த மருந்து இதுவரை யாருக்கும் கொடுக்கப்படவில்லை. தற்போது நிபா பரவல் அதிகரித்து வருவதால், ஆஸ்திரேலியாவில் இருந்து மேலும் 20 டோஸ் மருந்து கொள்முதல் செய்ய இருக்கிறோம். இந்த மருந்தை தொற்றின் ஆரம்பகட்டத்தில் அளிக்க வேண்டும்" என்றார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் (செப்.24) வரை அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் தொற்று எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பயிற்சி மையங்கள் என அனைத்துக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி நிபா பாதிப்பு 1,080 ஆக உள்ளது. இவர்களில் 327 பேர் சுகாதாரப் பணியாளர்கள் ஆவர். கோழிக்கோட்டை தவிர அண்டை மாவட்டங்களான மலப்புரம், கண்ணூர், திரிசூர், வயநாட்டிலும் நிபா தொற்று பரவியுள்ளது.

முன்னதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குநர் ராஜீவ் பாஹல் அளித்தப் பேட்டியில், "நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களிடையே இறப்பு விகிதம் மிகவும் அதிகமாக இருக்கிறது. கரோனா வைரஸ் பாதிப்பில் இறப்பு விகிதம் 2 சதவீதம் முதல் 3 சதவீதம் என்றால் நிபா வைரஸ் பாதிப்பில் இறப்பு விகிதம் 40 சதவீதம் முதல் 70 சதவீதம் ஆக உள்ளது. மேலும், கடந்த 2018-ம் ஆண்டு நிபா வைரஸ் தாக்கியபோது அது வவ்வால்கள் மூலமாகவே பரவியது என்பதை நாங்கள் உறுதி செய்தோம். ஆனால் இப்போது வைரஸ் பரவலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. பொதுவாகவே மழைப்பருவத்தில் இந்த நோய் அதிகம் பரவுகிறது. கடந்த முறை ஆஸ்திரேலியாவில் இருந்து 'மோனோகுளோனல் ஆன்டிபாடி' மருந்தை கொள்முதல் செய்திருந்தோம். தற்போது, அந்த மருந்து இதுவரை யாருக்கும் கொடுக்கப்படவில்லை. தற்போது நிபா பரவல் அதிகரித்து வருவதால், ஆஸ்திரேலியாவில் இருந்து மேலும் 20 டோஸ் மருந்து கொள்முதல் செய்ய இருக்கிறோம். இந்த மருந்தை தொற்றின் ஆரம்பகட்டத்தில் அளிக்க வேண்டும்" என்றார்.

by Kumar   on 17 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.