|
||||||||||||||||||
நிலக்கடலை பக்கோடா |
||||||||||||||||||
தேவையானவை : வறுக்காத நிலக்கடலை - 200 கிராம்
அரிசி மாவு - 1/4 கப்
கடலை மாவு - 1 1/2 கப்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 5 பல்
எண்ணெய் -பொரிப்பதற்கு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1.முதலில் இஞ்சி, பூண்டு இரண்டையும்தோல்நீக்கி கழுவி தனியே விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
2.ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு சிறிது தண்ணீர் தெளித்து நிலக்கடலை, பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த் தூள், அரைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும்.
3.அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும், கலந்து வைத்த நிலக்கடலை கலவையை உதிர்த்து, பொன் நிறமாக வறுத்து எடுக்கவும்.நிலக்கடலை பக்கோடா தயார் .
|
||||||||||||||||||
by punitha on 23 May 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|