|
||||||||
இந்தியர்கள் 3 வருடத்தில் ஜெர்மனியில் குடியுரிமை வாங்க முடியும்..!! |
||||||||
ஜெர்மனி நாட்டில் நீண்ட காலமாகக் குடியுரிமை விதிகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் தளர்வு அளிக்க வேண்டும் என்ற பேச்சு அந்நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்கள், நிறுவனங்கள், அரசியல் வட்டாரங்கள் மத்தியிலிருந்து வருகிறது.
ரஷ்யா - உக்ரைன் போருக்கு முன்பு கூட மொழி தொடர்பான கட்டுப்பாடுகளிலும், விதிமுறைகளிலும் தளர்வு அளிக்கப் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில் ஜெர்மனி நாடாளுமன்றத்தில் புதிய குடியுரிமைச் சட்டத் தளர்வுகளுக்கு 382-க்கு 234 வாக்குகள் பெற்று நடைமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இப்புதிய சட்டத் திருத்தம் மூலம் ஜெர்மனியில் வெளிநாட்டவர் குடியுரிமை பெறும் விதிமுறைகளில் தளர்வுகளும், இரட்டைக் குடியுரிமை விதிமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகளுக்கும் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இந்தத் தளர்வுகள் மூலம் ஜெர்மனியில் இருக்கும் நிறுவனங்கள் மிகவும் எளிதாகவும், அதிகளவிலும் திறமையான வெளிநாட்டு ஊழியர்களைப் பணியில் அமர்த்த முடியும்.
ஜெர்மனியில் பல லட்சம் இந்தியர்கள்
ஜெர்மனி நாட்டு மக்கள் தொகையில் சுமார் 14 சதவீதம் பேர் அதாவது 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் குடியுரிமை இல்லாமல் உள்ளனர், இதில் 5.3 மில்லியன் மக்கள் ஜெர்மனியில் 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக வசித்து வருகிறார்கள் என்பதை விளக்கி இந்தச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஜெர்மனி நாட்டு நிறுவனங்கள் வழக்கத்தை விடவும் அதிகமான வெளிநாட்டினரைப் பணியில் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதோடு ஜெர்மனியில் பல லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வரும் வேளையில் இவர்களுக்குக் குடியுரிமை பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது இந்தியர்களுக்கு ஜாக்பாட் ஆக உள்ளது. |
||||||||
by Kumar on 23 Jan 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|