சப்பான் தமிழ்ச்சங்கத்தின் கலை மற்றும் பண்பாட்டுத்துறையின் சார்பாக கடந்த 31ம் தேதி அன்று தோக்கியோவில் உள்ள கொமட்சுக்கவா சிவிக் ஹாலில் தாய்த்தமிழ் உறவுகள் புடை சூழ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில், சப்பானின் பல பகுதிகளில் இருந்து பல தமிழ் குடும்பங்கள் பங்கேற்றன.
பாரம்பரிய முறைப்படி குத்துவிளக்கு ஏற்றி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த விழாவில், குழந்தைகள் மற்றும் பெரியோர் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகளாலும், திரு.ராசா மற்றும் திருமதி.பாரதிபாஸ்கர் அவர்களின் பட்டிமன்ற பேச்சாலும் அரங்கமே மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தன.
இந்த சீர்மிகு விழாவினை, சப்பான் தமிழ்ச் சங்கத்தை சேர்ந்த, திரு.காமராஜ் மற்றும் திருமதி.திவ்யா அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினர். இவ்விழாவின் தலைமை ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து இவ்விழாவின் மிகப்பெரிய வெற்றிக்கு வித்திட்ட திரு.துரைபாண்டியன் மற்றும் திரு.பாலா அவர்களுக்கும் மற்றும் ஏனைய சப்பான் தமிழ்ச்சங்க உறவுகளுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.
|