LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- ஐரோப்பா

பிரித்தானியாவில் தமிழ் மரபுத்திங்கள் கொண்டாட்டம்

பிரித்தானியாவில் இன்று சுமார் 450,000 தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 1940 களில் தமிழர்கள் ஐக்கிய இராச்சியத்திற்கு குடிபெயரத் தொடங்கினர். அப்போதிருந்து, பிரித்தானிய தமிழர்கள் மிகப்பெரிய தடைகளைத் தாண்டி, இந்த மாபெரும் தேசத்தின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளனர்.


உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு இந்த தை மாதம் ஒரு முக்கியமான மாதம். தமிழ் அறுவடை நாள் , பொங்கல், அத்துடன் பிற தமிழ் கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகளும் நடைபெறும் மாதம் இது.


கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் இதை அங்கீகரித்து, தை மாதத்தை தமிழ் மரபுத்திங்களாக அறிவித்து ‘தமிழ் மரபுத்திங்கள் சட்டம், 2014’ ஐ நிறைவேற்றியுள்ளது.
பல தமிழ் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு அயராது உழைத்ததன் மூலம் இந்த பெரிய சாதனை சாத்தியமானது.

இன்று பிரித்தானியாவில் வாழும் தமிழ்மக்கள் தை2020 இல் இருந்து இந்த தை மாதத்தினை பிரித்தானியாவில் தமிழ் மரபுத்திங்களாக ஏற்றுக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம்.

தமிழ் மரபுத் திங்கள் பிரகடனத்தின் நோக்கம்:

* தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் கொண்டாடுதல்.

* உலகத் தமிழர்களின் பண்பாடு, கலைகள், மரபுகளைக் கொண்டாடுதல்.

* தமிழர் அல்லாதவர்களோடு தமிழ் மொழி, பண்பாடு, வரலாறு பற்றிப் பகிர்ந்து கொள்ளல்.

* பல்துறைகளில் தமிழர்களின் சாதனைகளை அடையாளப்படுத்தல்.

* தமிழர்களின் நலத்தையும் வளர்ச்சியையும் ஊக்குவித்தல்.

* பிரித்தானிய மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ் மொழி பாடத்தினை ஒரு தெரிவு பாடமாக ஆரம்பம் முதல் தெரிவு செய்கின்ற ஒரு நிலையை ஏற்படுத்துதல்

* பிரித்தானிய ஆரம்ப பள்ளிகளில் எமது தமிழ் மரபையும் தொன்மையையும் பற்றிய விளக்கங்களை ஆரம்பத்தில் இருந்தே சிறார்களுக்கு அறியப்படுத்தப் படுகின்ற ஒரு வாரத்தை தைத்திங்கள் மாதத்தில் உருவாக்குதல் .

இதன் அடிப்படையில் தை திங்களை தமிழ் மரபுத்திங்களாக [அ] எம்மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளவும், [ஆ] பிரித்தானியாவில் பிரகடனப்படுத்துவதற்கான முயற்சியாக எமது இரண்டாவது நிகழ்வு ஒன்று இணைய வழியாக தைத்திங்கள் 16 மற்றும் 17ம் திகதிகளில் 2021 இல் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது . உங்கள் அனைவரையும் அன்புடனும் உரிமையுடனும் வரவேற்கின்றோம்.

எங்களுக்கு உங்களின் ஆதரவை காட்டும் முகமாக , தயவு செய்து இதை உங்களின் முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்து விடுவீர்கள் என நம்புகின்றோம் ....

தமிழால் இணைவோம்
ஒன்றாய் எழுவோம்.


by Swathi   on 24 Dec 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.