LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

700 அடி ஆழத்தில் பூமிக்கடியில் புதைந்திருக்கும் பிரமாண்டக் கடலை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.

பூமிக்கடியில் 700 கிலோமீட்டர் ஆழத்தில் அனைத்துக் கடல்களை விட 3 மடங்கு பெரிதான கடல் மறைந்துள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் நாம் வாழும் பூமிக்கு அங்கிருந்து தான் தண்ணீர் கிடைத்து இருக்க வாய்ப்புள்ளது என அவர்கள் கூறியுள்ளனர்.

 

அமெரிக்காவின் இல்லினாய்ஸில் உள்ள எவன்ஸ்டன் நகரில் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நிலத்தடி நீர் தொடர்பாகப் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் பூமிக்கடியில் மிகப்பெரிய கடல் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

 

இந்தக் கடல் தற்போது பூமியில் உள்ள அனைத்துக் கடல்களையும் ஒன்றிணைத்தால் இருக்கும் அளவை விட மிகப்பெரியதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

பூமிக்கடியில் நிகழும் மாற்றங்கள் 

 

அதாவது பூமியின் நிலத்தடி நீர் ஆதாரம் குறித்து பல்கலைழக்கம் சார்பில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சியில் தான் பூமியில் உள்ள கடலை விடப் பூமிக்கடியில் பெரிய நீராதாரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பூமிக்கடியில் 700 கிலோமீட்டர் ஆழத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் அது பூமியில் உள்ள அனைத்துக் கடல்களையும் விட மூன்று மடங்கு பெரியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாகச் சிறிய கோள்கள் என அழைக்கப்படும் வால் நட்சத்திரங்கள் பூமியில் மோதியதன் காரணமாகத் தண்ணீர் பூமியில் உருவானதாகக் கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய இந்தக் கண்டுபிடிப்பு என்பது பூமியின் ஆழத்திலிருந்து பூமியில் தண்ணீர் தோன்றி இருக்கலாம் என யூகிக்க வைக்கிறது.

 

இதுபற்றி நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சிக்குத் தலைமை வகித்த விஞ்ஞானி ஸ்டீவன் ஜேக்கப்சன் கூறுகையில், ‛‛ ‛‛நாம் வாழும் பூமிக்குத் தண்ணீர் எப்படி வந்தது? இதற்கான விடை என்பது பூமிக்கடியில் இருந்து வந்தது என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஆராய்ச்சி அமைந்துள்ளது. இதற்கான வலுவான ஆதாரத்தை இந்த ஆய்வு காட்டுகிறது.

 

பூமிக்கடியில் நிகழும் மாற்றங்களை அறிய நிலநடுக்கங்களைப் பற்றிய ஆய்வும் செய்யப்பட்டது. 2000 நிலநடுக்கங்களின்போது ஏற்பட்ட 500 நில அதிர்வுகளின் அலைகளை ஆராயப்பட்டன. அப்போது நிலநடுக்கம் பூமிக்கடியில் மையம் கொண்டுள்ள தூரத்தைப் பொறுத்து அதிர்வுகளின் அதிவேகம் என்பது மாறுபட்டது.

 

இந்த அலைவேக மாறுபாட்டை ஆய்வு செய்தபோது பூமிக்கடியில் ஈரமான பாறைகள் இருப்பதும், ஆழம் செல்லச் செல்ல அதன் அலைவேக மாறுபாடு குறைந்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டதுள்ளது. இது தான் பூமியின் மேற்பரப்பில் உள்ள கடல் அளவை விட 3 மடங்கு பெரிய கடல் மறைந்துள்ளதைக் கண்டுபிடிக்க உதவியது' என்றார்.

by Kumar   on 07 Apr 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA. செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.