|
||||||||
மினசோட்டாவில் மிகச்சிறப்பாக நடத்த பொங்கல் விழா கொண்டாட்டம் |
||||||||
வட அமெரிக்காவில் "மினசோட்டா மாநிலத்தின் ஒரு அடையாளம் மினசோட்டாத் தமிழ்ச் சங்கம்" என்ற வகையில் பொங்கல் விழாவினை மிகச் சிறந்த தமிழர் விழாவாக வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் கொண்டாடியது என்றால் மிகையில்லை. உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்களும், இயற்கையை வழிபட்டு, தங்கள் நன்றியைச் செலுத்தி, பொங்கலிட்டு கொண்டாடும் ஒரு விழா என்றால் அது நமது பொங்கல் விழாவாகும். அத்தகைய தமிழர் திருவிழாவை, புலம்பெயர்ந்து வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் வாழும் நாம், நமது மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் கடந்த 13 ஆண்டுகளாக பொங்கல் விழா மற்றும் தமிழ்ப் புத்தாண்டினை கொண்டாடிவரும் சங்கமம் விழாவினில், இந்த ஆண்டு முதல் முறையாக இணையம் வழியாக சனவரி 24 ஞாயிற்றுக் கிழமை பகல் 10 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடிடும் நிகழ்வாகத் திட்டமிட்டோம். சிறப்பான நிகழ்ச்சிகள், பயிற்றுவித்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் இணையம் வழியாக நடத்துவதால் எத்தனை பேர் பங்கு பெறுவார்கள் என்ற ஐயம் எங்களுக்கு இருந்தது, ஆனால், மலரும் மொட்டும் முதல் பாரதியாரின் கவிதை வரிகளை பாடலாக பாடியது. ஆடல், பாடல் என்று அனைத்து துறைகளிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கு கொண்ட தித்திக்கும் சுவையுடன் கூடிய சக்கரைப்பொங்கலாக நிகழ்ச்சிகள் அனைத்தும் இரசிக்கும் படி இருந்தது. ஒவ்வொரு நிகழ்விற்கும் குழந்தைகளுக்கு பயிற்றுவித்த பாடல், நடன ஆசிரியர்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும், உதவிய செய்த பெற்றோர்களுக்கும் மிக்க நன்றி. தமிழ்த் தாய் வாழ்த்து வாழ்த்துரை சிறப்பு நிகழ்ச்சிகள் விழிப்புணர்வு நாடகம் - சிறப்பான கலைஞர்களின் நிகழ்வுகள் எத்தனை நடத்தினாலும், சங்கத்தின் குறிக்கோளாம் மினசோட்டா மக்களுக்கு வாய்ப்பளிக்க நமது திறமையை, கற்றுக்கொண்ட கலையை முன்னிறுத்த நாம் தவறியதில்லை. அவ்வகையில் மினசோட்டாத் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் நடித்த விழிப்புணர்வு நாடகம் - யாருப்பா மாறணும்? மேடையேற்றப்பட்டது. இதற்கு முன் சு.வெங்கடேசன் அவர்கள் எழுதிய வேள்பாரி மற்றும் திரு.ராஜு அவர்கள் எழுதிய ராசேந்திரச் சோழன் போன்ற வரலாற்று நாடகங்களை, முதல் முறையாக மினசோட்டாத் தமிழ்ப் பள்ளி மாணவர்களை வைத்து மேடையேற்றியது நமது தமிழ்ச் சங்கம். அந்த வரிசையில், மேடை நாடகத்தை, இந்த நோய் தொற்றுக் காலத்தில் ஒரு குறும் படம் வடிவிலேயே மாணவர்கள் பேசி நடித்து, நடனம் ஆடி, சிலம்பம், புலியாட்டம் போன்ற கலைகளை நிகழ்த்திய வகையில் அத்தனைச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருந்தது. பலர் வெகுவாகப் பாராட்டினர். இந்த நாடகத்தின் எழுத்து, ஆக்கம் திரு சுந்தரமூர்த்தி, ஒருங்கிணைப்பு சரவணக்குமரன், தொழில்நுடப உதவி தமிழ்பள்ளி மாணவர் ராஜ் இசக்கிமுத்து, நடனம் - மகேஸ்வரி அவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. https://youtu.be/G-KgfO18ZWE கருத்தரங்கம் - கடந்த வருடம் 2020 முத்தமிழ் விழாவில் திரு. ஞானசம்பந்தம் தலைமையில் நாம் நடத்திய பட்டிமன்றத்தில் பங்கு கொண்ட பேச்சாளர்கள், இம்முறை சங்கமம் பொங்கல் விழாவில் 'இயற்கை சார்ந்து வாழ்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்த ஆர்வம் தெரிவித்திருந்தனர். பங்கு பெற்ற பலர் ஒவ்வொருவரும் இயற்கையோடு ஒன்றிய தலைப்பில் மிகச் சிறப்பாகத் தங்கள் கருத்துகளை எடுத்து வைத்தனர். நமது தமிழ்ப் பள்ளியில் ஆசிரியராகவும், நிர்வாகக் குழுவில் பணியாற்றிய திரு.மதுசூதனன் வெங்கடராஜன் அவர்கள் நடுவராக இருந்து மிகச் சிறப்பாக பங்கேற்பாளர்களின் கருத்துகளை ஆராய்ந்து தனது கருத்துகளையும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் எடுத்து வைத்தார். நமது மினசோட்டாவில் இயல் சார்ந்து ஒரு திறமை வாய்ந்த ஒரு குழு அமையப்பெற்றதில் சங்க நிர்வாகிகளுக்கு மிக்க மகிழ்ச்சி. https://youtu.be/4OAvF5nnGjA பறையிசை-https://youtu.be/ok1GLGer8t4 மினசோட்டாத் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் மலரும் மொட்டும், சுட்டித்தனத்துடன் கொஞ்சிப்பேசும் அழகிலே, பல்வேறு வேடமிட்டு தங்களின் திறமையை, அதனூடே அழகாக காட்டிச் சென்ற, ஒரு அருமையான நிகழ்வு. இதனை நமது தமிழ்ப் பள்ளி மழலை ஆசிரியர்கள் அபிராமி நாகப்பன், சங்கீதா சரணவனக்குமரன், சோபியா ஜெயவீரன் அருமையாக ஒருங்கிணைத்திருந்தனர். பங்கு பெற்ற குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் மிக்க நன்றி. https://youtu.be/2-cekKzmTe4 எல்லைகள் கடந்த மொழி சார்ந்த இனக்குழுவாக தமிழுக்கென்று தனி அங்கீகாரத்தினை மினசோட்டாவில் வழங்கி சிறப்பித்து இருக்கிறது மினசோட்டாவின் பன்னாட்டு அமைப்பு (International Institute of Minnesota). இந்த தொடர்பையும், தமிழ்ச் சங்கத்தின் விழா பங்களிப்புகளையும், பயணத்தையும் பற்றி தனது கருத்துகளையும் வாழ்த்துகளையும் திருமதி கோரி எர்ட்ஸ் (Corinne Ertz - Development Director - International institute of Minnesota ) அவர்கள் வழங்கினார். மினசோட்டாத்தமிழ்ச்சங்கம் பத்துஆண்டுகளாக தமிழரின் நாட்டுப்புற மற்றும் மரபுக் கலைகளில்பல பணிகளை முன்னெடுத்து பல படைப்புகளை வழங்கி இருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக கலைப் பயிலரங்கம் நடத்த, நிதி உதவி வழங்கி வருகிறது மினசோட்டா மாநில கலைக் குழுமம் (MSAB). நமது கலைப் பயணத்தையும், தொடர் பங்களிப்பையும் பற்றி தனது கருத்துகளையும் வாழ்த்துகளையும் திருமதி இரீனா ரோசி ( Rina Rossi - Program Officer - Minnesota State Arts Board ) அவர்கள் வழங்கினார். இந்த நேரலையை சங்கத்தின் தலைவர். திரு சுந்தரமூர்த்தி, துணைத்தலைவர் திரு.சச்சிதானந்தன், இயக்குனர் திருமதி.பிரியா அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். விருந்தினர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. கடந்த 13 ஆண்டுகளில் நமது மினசோட்டாவிற்கு எண்ணற்ற கலைஞர்கள், தமிழ் அறிஞர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் திருபுஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி, திரு.சீர்காழி சிவசிதம்பரம், பறையிசை மற்றும் நாட்டுப்புற நடனங்கள் - திரு.ஆனந்தன் மற்றும் திருமதி அருள்செல்வி ஆனந்தன், நாகசுரம் மற்றும் தவில் - மாம்பலம் திரு.இராமச்சந்திரன், திரு.சிலம்பரசன், பறையிசை - திரு.சக்தி, பட்டிமன்ற பேச்சாளர் திருமதி.சுமதிஸ்ரீ நமது தமிழ்ச் சங்கத்தின் மொழி மற்றும் கலை ஆர்வத்தினையும், செயல்பாடுகளையும் மினசோட்டா மாநில ஆளுநரின் பிரகடனத்தினையும் பாராட்டும் வகையில் வாழ்த்துச் செய்தியை அனுப்பி இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.https://youtu.be/cIUQ74Zcawk?t=11434 தமிழ்ச் சங்க தலைவர் உரை - திரு.சுந்தரமூர்த்தி https://youtu.be/cIUQ74Zcawk?t=4311 மினசோட்டாத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான ஊக்கத்தொகை குறித்த உரை - தமிழ்ச் சங்க இயக்குனர், மருத்துவர் திரு.ஆறுமுகம் https://youtu.be/cIUQ74Zcawk?t=12720 கலைநிகழ்ச்சிகள் மற்றும் நன்றியுரை நன்றியுடன் Thank You, |
||||||||
by Swathi on 26 Feb 2021 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|