LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- ஆப்ரிக்கா

தென்னாப்பிரிக்காவிற்குத் தமிழ்மொழி-கலாச்சார வளர்ச்சிக்குத் தமிழ்நாடு அரசு உதவியுடன் தமிழ்ப்பல்கலைக்கழகக் குழு சென்று நடத்திய பயிற்சிப்பட்டறை..

தமிழ்நாடு, இலங்கைக்கு அடுத்து தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடு தென்னாப்பிரிக்கா. சிங்கப்பூர் , மலேசியாவைவிட எண்ணைக்கையில் அங்குத் தமிழர்கள் அதிகம்  என்பதும் தமிழ்ப் பெயர்களும் , கலாச்சாரமும் அங்கு இன்னும் பின்பற்றப்பட்டாலும், தமிழ் மொழி பேச்சு வழக்கில் இல்லை என்பது பலரும் கவலையுடன் சொல்லிவரும் நிலையில் அதற்குத் தீர்வு ஏற்படாமல் இருந்தது.

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் முயற்சியில் செயல்திறன் மிக்க தமிழார்வலர், பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், முனைவர்.இரா.குறிஞ்சிவேந்தன் அவர்கள் தலைமையில் ஒரு குழு தென்னாப்பிரிக்கா பயணித்து அங்கு தமிழ்மொழி வளர்ச்சி குறித்த 10 நாட்கள் பயிற்சிப்பட்டறை நடத்திவந்திருப்பது மிகப்பெரிய தொடக்கம். 

 

தமிழக அரசின் நிதியுதவியுடன், தமிழ் வளர்ச்சித்துறையின் பேருதவியுடன் டர்பன் நகர் சென்று 90 ஆண்டுகள் பழமை கொண்ட மியர்பேங்க் தமிழ்ச்சங்கப்பள்ளியில் இலக்கிய-இலக்கண-பேச்சுத்தமிழ்-கலைப்பண்பாட்டுப் பயிலரங்கு நடத்தப்பட்டது. 

 

தமிழ்ப் பல்கலையிலிருந்து பேராசிரியர் இரா.காமராசு, மைசூர் நடுவண்மொழிகள் நிறுவனத்தின் மூத்த பேராசிரியர் முனைவர் சாம் மோகன்லால், பென்சில்வேனியா பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் வாசு ரங்கநாதன், தேனாலேயே குரலைச் செதுக்கி இசைத்தெய்வம் வழங்கியுள்ள திருப்புவனம் ஆத்மநாதன் ஐயா, காவிரிக்கரையின் நாட்டுப்புறநாயகர் கலைமாமணி இளங்கோவன், யோகப் பயிற்சியாளர் முனைவர் தங்கபாண்டியன் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றனர். 

 

தமிழ் மீது எல்லையில்லா விருப்பம் கொண்ட 200 தென்னாப்பிரிக்கத் தமிழாசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் 10 நாட்கள் டர்பனில்  நடைபெற்ற இந்தப் பயிற்சி தென்னாப்பிரிக்க -தமிழ்நாட்டு மொழி, கலை , கலாச்சாரம் சார்ந்த உறவின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது

by Swathi   on 10 Feb 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.