|
|||||
வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன் |
|||||
தோற்றம் - டிசம்பர் 14 - 1939 மறைவு- 30 - மே - 2021 பிறந்த ஊர்- சென்னை மாவட்டம் - சென்னை
பெண்கள் பருவம் எய்தியதுமே திருமணம் செய்துவைத்துவிடும் காலத்தில் தன்னுடைய சகோதரர்களின் ஆதரவால் பி.ஏ. அரசியல் அறிவியல் படித்து, அதில் தங்கப் பதக்கமும் பெற்றார். பிறகு டெல்லியில் எம்.ஏ. பொது நிர்வாகம் படித்தார். டெல்லியில் படித்து முடித்த மைதிலிக்கு அமெரிக்கா சென்று படிப்பதற்கான உதவித்தொகை கிடைத்தது.
அமெரிக்காவில் படிப்பை முடித்த பிறகு, ஐ.நா. சபையில் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகள் குறித்த குழுவில் ஆராய்ச்சியாளராக இணைந்தார். அன்றைய சூழ்நிலையில் அமெரிக்காவில் உரிமையியல் உரிமைக்கான போராட்டங்கள் உச்சக்கட்டத்தில் இருந்தன. அங்கு நடந்த அரசியல் மாற்றங்கள், போராட்டங்கள், படுகொலைகள் போன்றவை மைதிலியை மிகவும் பாதித்தன. மக்கள் பணியில் லட்சியத்துடன் பயணித்தார் அமெரிக்காவை எதிர்த்து நிற்கும் கியூபாவுக்குச் சென்றார். நிலச் சீர்திருத்த நடவடிக்கை, அனைவருக்கும் சமமான கல்வி முறை போன்றவற்றைக் கண்டு ஆச்சரியப்பட்டார். ஒரு பொதுவுடைமை அரசாங்கத்தால் மட்டுமே மக்களுக்காகச் செயல்பட முடியும் என்பதை அறிந்துகொண்டார். இந்தியா திரும்பிய மைதிலி சிவராமனுக்குப் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணி கிடைத்தது. லண்டன் பள்ளி ஆஃப் எகனாமிஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்புக்கான வாய்ப்பும் கிடைத்தது. இரு வாய்ப்புகளையும் நிராகரித்த மைதிலி, மக்கள் பணியில் லட்சியத்துடன் பயணித்தார்.
சென்னையில் நண்பர்களான என்.ராம், ப.சிதம்பரம் ஆகியோருடன் சேர்ந்து ‘ராடிகல் ரெவ்யூ’ என்ற ஆங்கிலப் பத்திரிகையைத் தொடங்கி, ஆசிரியராகச் செயல்பட்டார். தொழிற்சங்கப் போராட்டங்களில் கீழவெண்மணிப் படுகொலைகளை உலகின் கவனத்துக்குக் கொண்டு வந்ததில் மைதிலியின் பங்கு முக்கியமானது. ‘வாச்சாத்தி வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, உண்மைகளை வெளிக்கொண்டு வந்தார்.
1970-களில் தொழிற்சங்கப் போராட்டங்களில் மைதிலியின் பங்கு முக்கியமானது. உழைக்கும் பெண்களுக்கான உரிமைகளுக்காகவும் போராடியிருக்கிறார்.
தன் வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்கான போராட்டங்களில் செலவிட்டார் மைதிலி சிவராமன். |
|||||
by Kumar on 19 Dec 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|