|
|||||
புதிய அனல்மின் நிலையங்கள் தொடங்க புதிய நெறிமுறைகள்- மத்திய அமைச்சகம் வெளியீடு! |
|||||
புதிய அனல்மின் நிலையங்கள் தொடங்குவதற்கான புதிய நெறிமுறைகளை மத்திய சுற்றுசூழல்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. இந்த விதிமுறைகளின் பட்டியல் பின்வருமாறு: கடலோரத்தில் அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டு கடல்நீர் குளிரோட்ட பயன்படும் என்றால் கழிவு நிலை என்பது பூஜ்ஜியமாக இருக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. அனல்மின் நிலையங்களில் புகை வெளியேற்றி குழாய்களை அமைக்க விமானப் போக்குவரத்துத் துறையின் அனுமதியையும் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கட்டுமான பணிகளுக்கு நிலத்தடி நீரை கட்டாயம் பயன்படுத்தக் கூடாது என்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலை என்றால் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் அனுமதியை பெற்று இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. நிலக்கரியை கையாள தூசி எழாத போக்குவரத்தையை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. |
|||||
by Mani Bharathi on 22 Nov 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|