|
||||||||
நவதானிய அடை (navadhanya adai) |
||||||||
தேவையானவை: பருப்புவகைகள் எல்லாம் சேர்ந்து- அரைகப் ப்ரவுன் ரைஸ்-1/2கப் வரமிளகாய்- 7 சீரகம்-1டீஸ்பூன் பெருங்காயம்- 1/4டீஸ்பூன் உப்பு வெங்காயம்-1 பச்சைமிளகாய்-1 கறிவேப்பிலை-கொத்துமல்லி சிறிது தேங்காய்ப்பல்லு-2 டேபிள்ஸ்பூன் கடுகு-1/2டீஸ்பூன் க.பருப்பு, உ.பருப்பு- தலா ஒரு டீஸ்பூன் எண்ணெய்-சிறிது செய்முறை : 1.முதலில் அரிசி,பருப்புவகைகளை களைந்து, மிளகாயுடன் 4 மணி நேரம் ஊறவைக்கவும். 2.பிறகு ஊறியதும், பெருங்காயத்தூள் சேர்த்து, கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு, கொறகொறப்பாக அரைக்கவும். 3.கடைசியில் சீரகம் சேர்த்து 2 சுற்று மிக்ஸியை ஓடவிட்டு மாவை எடுத்துவைக்கவும். 4.ஒரு கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு,க.பருப்பு,உ.பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம்-ப.மிளகாய்-கறிவேப்பிலை,தேங்காய்ப்பல்லு,கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும். 5.அடை சுடும்பொழுது வதக்கிய வெங்காய கலவை,தேவையான உப்பு சேர்த்து அடைமாவில் கலந்து வைக்கவும். 6.தோசைக்கல்லை காயவைத்து அடைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப்போட்டு பொன்னிறமானதும் எடுத்து பரிமாறவும். |
||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|