LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ரயில் விபத்தை தடுத்த மதுரை ரயில்வே ஊழியருக்கு தேசிய விருது

ரயில்வே துறையில் சிறப்பாக பணியாற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய அளவில் அடி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார் என்ற விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு இந்திய அளவில் 100 ஊழியர்கள், அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

ரயில் பாதை பராமரிப்பு பணியாளர் 

 

தெற்கு ரயில்வே பிரிவில் 6 ஊழியர்கள், 3 அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் மதுரை கோட்டம் மானாமதுரை ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணியாளர் கே.வீரப்பெருமாள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். அவர் ரயில் பாதையில் விரிசல் இருப்பதை கண்டறிந்து துரிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

 

சென்னையில் பணியாற்றும் மதுரை கோட்ட பயணச் சீட்டு பரிசோதகர் டி.செல்வகுமார் போலி ஆதார் அட்டைகளை பயன்படுத்தி ரயில் பயணச்சீட்டில் பெயர் மாற்றம் செய்வது மற்றும் முதியோர் இட ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்துவது போன்றவற்றை கண்டறிந்து அபராதம் விதித்தார். இதற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது.

 

ரயில் பாதையை பலப்படுத்த உறுதுணை

 

ரயில் பாதையில் நின்ற யானையை காப்பாற்ற விரைந்து ஓடும் ரயிலை நிறுத்திய ரயில் ஓட்டுநர் ஈரோடு எம். கே. சுதீஷ்குமார், சட்ட விரோத நடவடிக்கையை தடுத்து நிறுத்திய சென்னை ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் மதுசூதன் ரெட்டி, எலக்ட்ரிக் ரயில் இன்ஜின் முகப்பை பழைய கால நீராவி என்ஜின் போல மாற்றிய ஆவடி பகுதி பொறியாளர் ஏ. செல்வராஜா,

 

இதய நோயாளிகளுக்கு சிறப்பாக சேவை செய்த பெரம்பூர் ரயில்வே மருத்துவ செவிலிய கண்காணிப்பாளர் துர்கா தேவி, முதல் பாரத் கவுரவ் ரயில் இயக்க உறுதுணையாக இருந்த சேலம் கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் இ.ஹரி கிருஷ்ணன், சென்னை பகுதியில் ரயில்களை அதிவேகத்தில் இயக்க ரயில் பாதையை பலப்படுத்த உறுதுணையாக இருந்த சென்னை கோட்ட முது நிலை பொறியாளர் எஸ்.மயிலேறி,

 

சிக்னல் குறைபாடுகளை தவிர்க்க உறுதுணையாக இருந்த உதவி தொலைத் தொடர்பு பொறியாளர் எஸ்.மாரியப்பன் ஆகியோருக்கும் தேசிய விருது வழங்கப்படுகிறது. இந்த தகவலை மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

by Kumar   on 14 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.