LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா

நம்மாழ்வாரின் ‘வானகம்’ செய்வதென்ன?!

 

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் பெரும் முயற்சியால் துவங்கப்பட்டுள்ள, ‘வானகம்” என்னும் அமைப்பு, இயற்கை நலன் காப்பதற்காக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நம்மாழ்வார் இங்கே பேசுகிறார்.
நம்மாழ்வார்:
“ஈஷா வலைதளத்தில் உங்கள் எழுத்துக்களைப் படித்திருக்கிறேன்” என்று புன்முறுவலோடு சொல்பவர்களை அடிக்கடி பார்ப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கு எல்லாம் மகிழ்வளிக்கக்கூடிய ஒரு செய்தி! கடவூர் ஊராட்சியில் அடங்கிய சுருமான்பட்டியில் ‘வானகம்’ என்னும் அமைப்பு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த ‘வானகம்‘ அமைப்பு என்ன செய்துகொண்டிருக்கிறது?
பசிப்பிணி களைவதற்கான ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்தி, அதன் மூலம் பலரையும் பசிப்பிணி களையும் முயற்சியில் ஈடுபடுத்துவது வானகத்தின் திட்டம்.
நெருப்பினுள் தூங்குவதுகூட சாத்தியப்படும். பசியோடு இருப்பவர் கண் மூடுவது சாத்தியப்படாது. அத்தகைய பசியையும் தள்ளிப்போடுபவர்கள் உண்டு. அவர்களைத்தான் துறவிகள் என்றும், முனிவர்கள் என்றும் சொல்கிறோம். அப்படித் துறவிகள் தவம் இருந்து பசியாற்றுவது பெரிய செயல் அல்ல. மாறாகப் பசித்தவரின் பசியைத் துடைக்கும் தாளாளர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். காரணம் துறவிகள் பசியை பொறுத்துக் கொள்வது சுயநலம். பிறர் பசியைத் தீர்ப்பவர் வெளிப்படுத்துவது பொதுநலம். பொருள் அற்றவர் பசியை ஓட்டுவதே செல்வந்தர்கள் பொருளைச் சேமிப்பதற்குச் சிறந்த இடம். ஆதலால், மனிதர்கள் மாண்புடன் வாழ பசிப்பிணி போக்கும் ஆராய்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது முக்கியம். இத்தகைய அறப்பணிக்குத் தூண்டுகோலாய் அமைந்துள்ளது வானகம்.
வானகம் தொடக்க விழாவை 100 மரக்கன்றுகள் நட்டு விழாவைத் தொடங்க நினைத்தோம். ஈஷா இயக்கத்தின் பசுமைக் கரங்கள் உதவிக் கரம் நீட்டியது. பசுமைக் கரங்கள் திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் 100 மரக் கன்றுகளைக் கொண்டுவந்து இறக்கினார். அவருடன் ஃப்ரான்ஸ் நாட்டுப் பிரதிநிதி ஜான் ஃபிலிப்பும் வந்திருந்தார்.
கோவையில், திருப்பூரில், சென்னையில், பாண்டிச்சேரியில், நாகை மாவட்டத்தில் “நான் நிலம் தருகிறேன், நான் நிலம் தருகிறேன்” என்று மக்கள் முந்துகிறார்கள். தன்னார்வத் தொண்டர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களுக்குப் பயிற்சியளிக்கும் பொறுப்பை வானகம் ஏற்கிறது.
‘வேலை இல்லை’ என்று தொய்ந்துகிடப்போருக்கு மகிழ்வூட்டும் வேலை. தனிமை நோகடிக்கிறது என்போருக்கு குழுவாகச் செயல்படுவதற்கான வாய்ப்பு. தரிசாகக் கிடக்கும் எனது நிலத்தைப் பசுமைக் கூடாரமாக மாற்றுவேன் என்போருக்குப் பயிற்சி. புகை மலிந்த பட்டண வாழ்க்கை கசக்கிறது என்போருக்கு ஓர் இனிமையான பொழுதுபோக்கு. என்னிடம் நிலம் உள்ளது, நிதி
நீர், நெருப்பு, நிலம், காற்று மற்றும் வெளி ஆகிய ஐந்து பெரும் பூதங்கள்தான்.
இன்று இந்த ஐந்து பூதச் செயல்கள்தான் சமநிலை இழந்து கிடக்கின்றன. நெருப்பு கொதிக்கிறது. வெளி விரிகிறது. நீர் சுருங்குகிறது. அது மேலும் மாசுபடுகிறது. காற்றும் மாசு பட்டு நோய் மிஞ்சுகிறது. நிலம் சுருங்குகிறது. வேளாண்மை அல்லாத பயன்பாட்டுக்கு மாற்றப்படுகிறது. வேளாண்மை நடைபெறுவதற்கு நல்ல நிலம், போதிய தண்ணீர், மின்சக்தி, மனித உழைப்பு அனைத்தும் தேவைப்படுகிறது.
நீர் குறைந்து நிலம் சுருங்கி, சக்தி இன்றி, நிதியின்றி, உழைப்பு ஒன்றையே மூலதனமாகக்கொண்டவர்கள் சோளம், கம்பு, வரகு, கேழ்வரகு, குதிரைவாலி, சாமை, திணை, காடைக்கண்ணி போன்ற சத்து மிகு தானியங்களைப் பயிர் செய்கிறார்கள். இவர்கள் பட்ட பாட்டுக்குப் பலன் கிடைப்பதற்குப் பருவகால மாறுபாடுகள் இடையூறாக உள்ளன.
ஆன்மிகமும், அறிவியலும், சமூகவியலும் கைகோக்க வேண்டியுள்ளது. பசுமைக் கரங்கள் திட்டம் அனைவரையும் இணைக்கும் பந்தமாக அமைகிறது. பசுமைக் குடை ஒன்றே மழையை மண்ணுக்குள் அனுப்பும். மனிதர்க்குப் புகலிடம் அளிக்கும்!

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் பெரும் முயற்சியால் துவங்கப்பட்டுள்ள, ‘வானகம்” என்னும் அமைப்பு, இயற்கை நலன் காப்பதற்காக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நம்மாழ்வார் இங்கே பேசுகிறார்.


நம்மாழ்வார்:


“ஈஷா வலைதளத்தில் உங்கள் எழுத்துக்களைப் படித்திருக்கிறேன்” என்று புன்முறுவலோடு சொல்பவர்களை அடிக்கடி பார்ப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கு எல்லாம் மகிழ்வளிக்கக்கூடிய ஒரு செய்தி! கடவூர் ஊராட்சியில் அடங்கிய சுருமான்பட்டியில் ‘வானகம்’ என்னும் அமைப்பு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த ‘வானகம்‘ அமைப்பு என்ன செய்துகொண்டிருக்கிறது?


பசிப்பிணி களைவதற்கான ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்தி, அதன் மூலம் பலரையும் பசிப்பிணி களையும் முயற்சியில் ஈடுபடுத்துவது வானகத்தின் திட்டம்.


நெருப்பினுள் தூங்குவதுகூட சாத்தியப்படும். பசியோடு இருப்பவர் கண் மூடுவது சாத்தியப்படாது. அத்தகைய பசியையும் தள்ளிப்போடுபவர்கள் உண்டு. அவர்களைத்தான் துறவிகள் என்றும், முனிவர்கள் என்றும் சொல்கிறோம். அப்படித் துறவிகள் தவம் இருந்து பசியாற்றுவது பெரிய செயல் அல்ல. மாறாகப் பசித்தவரின் பசியைத் துடைக்கும் தாளாளர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். காரணம் துறவிகள் பசியை பொறுத்துக் கொள்வது சுயநலம். பிறர் பசியைத் தீர்ப்பவர் வெளிப்படுத்துவது பொதுநலம். பொருள் அற்றவர் பசியை ஓட்டுவதே செல்வந்தர்கள் பொருளைச் சேமிப்பதற்குச் சிறந்த இடம். ஆதலால், மனிதர்கள் மாண்புடன் வாழ பசிப்பிணி போக்கும் ஆராய்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது முக்கியம். இத்தகைய அறப்பணிக்குத் தூண்டுகோலாய் அமைந்துள்ளது வானகம்.


வானகம் தொடக்க விழாவை 100 மரக்கன்றுகள் நட்டு விழாவைத் தொடங்க நினைத்தோம். ஈஷா இயக்கத்தின் பசுமைக் கரங்கள் உதவிக் கரம் நீட்டியது. பசுமைக் கரங்கள் திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் 100 மரக் கன்றுகளைக் கொண்டுவந்து இறக்கினார். அவருடன் ஃப்ரான்ஸ் நாட்டுப் பிரதிநிதி ஜான் ஃபிலிப்பும் வந்திருந்தார்.


கோவையில், திருப்பூரில், சென்னையில், பாண்டிச்சேரியில், நாகை மாவட்டத்தில் “நான் நிலம் தருகிறேன், நான் நிலம் தருகிறேன்” என்று மக்கள் முந்துகிறார்கள். தன்னார்வத் தொண்டர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களுக்குப் பயிற்சியளிக்கும் பொறுப்பை வானகம் ஏற்கிறது.


‘வேலை இல்லை’ என்று தொய்ந்துகிடப்போருக்கு மகிழ்வூட்டும் வேலை. தனிமை நோகடிக்கிறது என்போருக்கு குழுவாகச் செயல்படுவதற்கான வாய்ப்பு. தரிசாகக் கிடக்கும் எனது நிலத்தைப் பசுமைக் கூடாரமாக மாற்றுவேன் என்போருக்குப் பயிற்சி. புகை மலிந்த பட்டண வாழ்க்கை கசக்கிறது என்போருக்கு ஓர் இனிமையான பொழுதுபோக்கு. என்னிடம் நிலம் உள்ளது, நிதி

நீர், நெருப்பு, நிலம், காற்று மற்றும் வெளி ஆகிய ஐந்து பெரும் பூதங்கள்தான்.


இன்று இந்த ஐந்து பூதச் செயல்கள்தான் சமநிலை இழந்து கிடக்கின்றன. நெருப்பு கொதிக்கிறது. வெளி விரிகிறது. நீர் சுருங்குகிறது. அது மேலும் மாசுபடுகிறது. காற்றும் மாசு பட்டு நோய் மிஞ்சுகிறது. நிலம் சுருங்குகிறது. வேளாண்மை அல்லாத பயன்பாட்டுக்கு மாற்றப்படுகிறது. வேளாண்மை நடைபெறுவதற்கு நல்ல நிலம், போதிய தண்ணீர், மின்சக்தி, மனித உழைப்பு அனைத்தும் தேவைப்படுகிறது.


நீர் குறைந்து நிலம் சுருங்கி, சக்தி இன்றி, நிதியின்றி, உழைப்பு ஒன்றையே மூலதனமாகக்கொண்டவர்கள் சோளம், கம்பு, வரகு, கேழ்வரகு, குதிரைவாலி, சாமை, திணை, காடைக்கண்ணி போன்ற சத்து மிகு தானியங்களைப் பயிர் செய்கிறார்கள். இவர்கள் பட்ட பாட்டுக்குப் பலன் கிடைப்பதற்குப் பருவகால மாறுபாடுகள் இடையூறாக உள்ளன.


ஆன்மிகமும், அறிவியலும், சமூகவியலும் கைகோக்க வேண்டியுள்ளது. பசுமைக் கரங்கள் திட்டம் அனைவரையும் இணைக்கும் பந்தமாக அமைகிறது. பசுமைக் குடை ஒன்றே மழையை மண்ணுக்குள் அனுப்பும். மனிதர்க்குப் புகலிடம் அளிக்கும்!

by Swathi   on 31 Mar 2014  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
30-Mar-2015 01:30:13 Amala said : Report Abuse
அனைத்தும் நன்றாக இருந்தது.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.