மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த கோ விஞ்ஞான் அனுசந்தன் கேந்திரா என்ற அமைப்பு, பசுவின் கோமியத்திலிருந்து நோய் கொல்லி மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது, இந்த மருந்துக்கு அமெரிக்கா அரசு காப்புரிமை அளித்துள்ளது.
இது குறித்து கோ விஞ்ஞான் அனுசந்தன் கேந்திரா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது, நாங்கள் உருவாக்கிய, "காமதேனு கிட்னியந்த்ரக்' என்ற பூச்சிக்கொல்லி மருந்து, பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கொல்வதுடன், வைரஸ், காளான், கிருமிகளையும் கொல்கிறது. பசு கோமியம், வேம்பு, வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த மருந்துக்கு, அமெரிக்கா காப்புரிமை வழங்கியுள்ளது. இந்த மருந்து பூச்சிகளைக் கொல்வதுடன், மண்ணின் ஆரோக்கியத்தையும் இது மேம்பாடு அடையச் செய்யும். வீட்டிலேயே எளிதாக இதைத் தயாரிக்க முடியும். இதனால், வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன், 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ரசாயன உர உற்பத்தியை நிறுத்தவும் முடியும் என அவர் தெரிவித்தார்.
|