LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

தத்து என்று கூறி குழந்தைகள் கடத்தலைத் தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: அதிகாரி தகவல்!

தத்து என்று கூறி குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க இந்தியா முழுவதும் மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும் என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் கூறி உள்ளார். 

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் சென்னையில்  அளித்த பேட்டியில் கூறியதாவது:

மேற்கு வங்கம், பீகார் மாநிலங்களில் எல்லையில் ஆராரியா என்ற இடத்தில் இயங்கி வந்த குழந்தைகள் தத்தெடுப்பு மையத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நடத்திய சோதனையில் ஒரு குழந்தை உறுப்பு தானத்திற்காக ஸ்பெயின் நாட்டிற்கு 5 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாயில் ரூ.4 லட்சம் மதிப்பு) விற்பனை செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மத்திய அமைச்சர் மேனகா காந்தி உத்தரவின் பேரில் அந்த இல்லத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அந்த குழந்தை மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

‘‘தத்தெடுப்பு’’ என்ற பெயரில் பணத்திற்காக நூதன முறையில் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க இந்தியா முழுவதும் மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த கண்காணிப்பு குழு அமைக்கப்படும். இந்த குழுவில் புகார் செய்தால் 24 மணி நேரத்தில் பதில் வரும். 48 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு கண்காணிப்பு குழுவினர் நேரடியாக சென்று விசாரணை நடத்துவார்கள். 

கடந்த 6 மாதத்தில் இந்தியாவில் இருந்து எத்தனை குழந்தைகள் தத்தெடுப்பு என்ற பெயரில் விற்கப்பட்டுள்ளது என்ற பட்டியல் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த பட்டியல் முழுமையாக தயாரிக்கப்பட்ட பின்னர் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு சென்று விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம்.

ஏற்கனவே குழந்தைகள் கடத்தல், குழந்தைகள் குறித்து புகார்களை தெரிவிக்க ‘‘1098’’ என்ற தொலைபேசி எண் உள்ளது. இந்த புகார் எண்ணை போன்று பாதிக்கப்பட்ட குழந்தைகளே நேரடியாக தங்களுடைய புகார்களை தெரிவிக்கும் வகையில் புதிய எண் விரைவில் அமல்படுத்தப்படும். 

அதிரடி நடவடிக்கை காரணமாக கடந்த 4 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 4.2 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இனிமேல் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படும்.

இவ்வாறு ஆனந்த் கூறினார்.

by Mani Bharathi   on 09 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.