|
||||||||
நலம் காக்கும் சித்த மருத்துவம் : உயிர் – 4 |
||||||||
உயிர் இதுவரை உடலின் ஏழு அடிப்படைத் திசுக்களைப் பற்றி அறிந்தோம். இவைதான் உடலின் கட்டமைப்பு என்று பார்த்தோம். இந்த வாரம் இவை அடங்கிய உடலை இயக்குவிக்கும் ஆற்றலை அறிய உள்ளோம். அந்த ஆற்றல்தான் உயிர் என்று சித்தர்கள் கூறுகின்றார்கள். இக்கால அறிவியல்படி எளிமையாக விளக்குவதென்றால் உடல் என்பது பொருள் (Matter) உயிர் என்பது ஆற்றல் (Energy) என ஒப்பு நோக்கலாம். கருப்பையில் உடல் உருவாகும்போது எப்படி உயிர் வந்து இணைகிறது என்பதும் இறக்கும் போது இதே உயிர் எப்படி வெளியேறுகிறது என்பதும் திருமூலர், சிவவாக்கியர் போன்ற சித்தர்களால் திறம்பட விளக்கப்பட்டுள்ளது. அவை எல்லாவற்றையும் வேறு ஒரு தருணத்தில் நாம் பார்க்கலாம். இப்போது உயிர் என்கிற ஆற்றலைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். உயிர்தான் உடலில் எல்லா வேலைகளையும் செய்விக்கின்றது. எப்படி ஒரே ஆற்றல் எல்லாச் செயல்களுக்கும் அடிப்படையாகின்றது? ஒரு சிறு உதாரணத்துடன் விளக்கலாம். ஒரே மின்ஆற்றல் எப்படி குளிர் ஆற்றலாகவும் சூடு ஆற்றலாகவும் ஒளியாற்றலாகவும் பல்வேறு இயக்கங்களாகவும் மாறுகின்றதோ அப்படியே ஒரே உயிர் ஆற்றல் உடலின் பல்வேறு இயக்கங்களுக்கு அடிப்படையாகின்றது. உடலின் பல்வேறு இயக்கங்கள் நடந்து கொண்டிருந்தாலும் அவை எல்லாவற்றையும் சித்தர்கள் மூன்று பெரும் பிரிவுகளுக்குள் அடக்கியுள்ளார்கள். அவை வளி (வாதம், ஊதை, காற்று, வாயு) அழல் (பித்தம், சூடு, அனல், வெப்பம்) ஐயம் (கபம், கோழை, குளிர்ச்சி) ஆகியனவாகும். இதனையே வள்ளுவர் மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் வளி முதலா எண்ணிய மூன்று - குறள் 941 எனக் குறிப்பிடுகின்றார். இந்த அடிப்படை உயிர் ஆற்றல்களாகிய வளி, அழல், ஐயம் என்கிற மூன்றும் ஏதேனும் ஒரு காரணத்தினால் தம் அளவை விட உயர்ந்தாலோ அல்லது குறைந்தாலோ நோயினை உண்டாக்கும். இதுதான் நோய் என்பதற்கான மிக மிக எளிய விளக்கமாகும். வளி என்கிற வாதம் உடலில் இயற்கையாக செயல்பட்டால் என்னென்ன நிகழ்வுகள் உண்டாகும் என்பதைச் சித்தர்கள் கூறியவற்றில் சிலவற்றை மட்டும் பார்க்கலாம். வளி ஆற்றல் இயல்பு நிலை
இந்த உயிராற்றல் உணவு மற்றும் நமது செயல்பாடுகளால் கூடினாலோ குறைந்தாலோ என்னென்ன குறிகுணங்கள் உடலில் தோன்றுமெனப் பார்க்கலாம். வளி உடலில் மிகுதியாகச் செயல்பாட்டால் ஏற்படும் முக்கியக் குறிகுணங்கள்
வளி குறைந்தால் ஏற்படும் குறிகுணங்கள்
காற்று என்கிற வளி ஆற்றல் உடலில் இயங்கும் விதத்தை வைத்து சித்தர்கள் பத்து விதமாகப் பிரித்துள்ளனர்.
இவை ஒவ்வொன்றிற்க்கும் தனித்தனியாக செயல்பாடுகள் உண்டு. அவற்றை சீர்படுத்தும் வழிமுறைகளும் சித்தர் நூல்களில் கூறப்பட்டுள்ளன. இரண்டாவது ஆற்றல் அழல் இது உடலில் இயல்பாகச் செயல்பட்டால்
அழல் ஆற்றல் உடலில் கூடிவிட்டால்
அழல் ஆற்றல் குறைவுபட்டால்
மூன்றாவது ஆற்றலாகிய ஐம் உடலில் இயல்பாகச் செயல்பட்டால்
ஐயம் உடலில் அதிகப்பட்டால்
ஐயம் உடலில் குறைவுபட்டால்
உயிர் ஆற்றல் வகைகளையும் அவை கூடினால் குறைந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்களையும் இதுவரை பார்த்தோம். ஏற்கனவே உடல் திசுக்களுக்கும் (Matter) உயிர் ஆற்றலுக்கும் (Energy) பஞ்ச பூதங்களே அடிப்படை என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஐந்து பூதங்களுக்கும் ஏழு உடற்திசுக்களுக்கும் உயிர் ஆற்றலுக்கும் உள்ள தொடர்பினை இப்போது பார்க்கலாம். உடல் திசு பஞ்சபுதம் சாரம் - நீர் குருதி (இரத்தம்) - நீர் + தீ ஊன் (தசை) - மண் + நீர் கொழுப்பு - நீர் + மண் எலும்பு - மண் + காற்று மூளை - நீர் + காற்று சுக்கிலம் - தீ + காற்று உயிர் ஆற்றல் பஞ்சபுதம் வளி - காற்று + ஆகாயம் அழல் - தீ ஐயம் - மண் + நீர் ஏழு உடற்கட்டுக்கள் மற்றும் மூன்று உயிர் ஆற்றல்கள் மட்டுமே உடல் அல்ல. மொத்தம் 96 நுட்பமான தத்துவங்கள் அடங்கியதே இந்த உடல் என்பது சித்தர்கள் கருத்து. இவற்றை தொடரில் அவ்வப்போது விளக்கலாம். இனி இவ்விதமாக போற்றத்தக்க உடலை நம் முறையான வாழ்க்கை முறையினால் எவ்விதம் பாதுகாக்கவும் என்பதை அடுத்த வாரம் முதல் பார்க்கப்போகிறோம். அதில் முதல் கட்டமாக நாள் ஒழுக்கம் அதாவது காலை எழுந்த்து முதல் இரவு உறங்கப் போகும் வரை நாம் பின்பற்றவேண்டிய ஒழுக்க முறைகளை ஒவ்வொன்றாகப் பார்க்கப்போகிறோம். உடல் நலம் காக்க நம் பயணம் தொடரும்.
|
||||||||
by Swathi on 07 Oct 2014 0 Comments | ||||||||
Tags: Siddha Maruthuvam Kurippugal Siddha Maruthuvam Tamil Dr.Selva Shunmugam Siddha Maruthuvar Siddha Maruthuvar Thodar Tamil சித்த மருத்துவம் சித்த மருத்துவ குறிப்புகள் | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|