LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்

திருக்குறள் முற்றோதல் பயிற்சி கலந்தாய்வுக் கூட்டம்- 07/01/2023

திருக்குறள் முற்றோதல்பயிற்சி கலந்தாய்வுக் கூட்டம் 07/01/2023 மாலை 0700 -0800 நடைபெற்றது .

  • அதில் முற்றோதல் பயிற்சி ஆசிரியர்கள் காமராஜ் பழனி கோபி சிங் சங்கீதா கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டார்கள் .மேலும் சி இராஜேந்திரன்,ரவி சொக்கலிங்கம் ,பார்த்தசாரதி, தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் வலைத்தமிழ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    கூட்டம் குறித்த நேரத்தில் ஆரம்பித்து நிறைவு செய்யப்பட்டது.
  • ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் முதற்கண் நன்றி
  • தமிழ் வளர்ச்சித் துறை பல மாவட்டங்களில் திருக்குறள் முற்றோதல் தேர்வுக்கான நாளைக் குறிப்பிட்டு அறிவிப்பைவெளியிட்டு இருந்தாலும் செங்கல்பட்டு திருவண்ணாமலை அதை சுற்றி உள்ள மாவட்டங்களில்வெளியிடப்படவில்லை என்று தெரிவித்தார்கள்

தற்போதைய முற்றோதல் நிலவரம்:

  • திரு காமராஜ்திருவண்ணாமலையில் திருக்குறள் முற்றோதல் திறனறித் தேர்வுக்கு20 பேர் பதிவு செய்துள்ளார்கள் .அதில் 13 பேர் தேறி விடுவார்கள் என்று கூறினார் . அடுத்த ஆண்டுக்கு கிட்டத்தட்ட 250 மாணவர்களை பதிவு செய்ய முயற்சி செய்வதாகக் கூறினார்.
  • திருகோபி சிங் 10 மாணவர்களை இந்த ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறை முற்றோதல் திறனறித்தேர்வுக்குஅழைத்துச் சென்றதாகவும் அந்த பத்து பேருமே தேர்ச்சி பெற்றதாகவும் கூறினார். 25 மாணவர்கள் 50 /60 அதிகாரம் சொல்லும் திறன் பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்றும்மேலும் மாணவர்கள் வந்தால் அவர்களுக்கு பயிற்சி அளிக்க தான் தயாராக இருப்பதாக கூறினார்
  • திரு க. கோ பழனி ஐந்து பேர் இதுவரை திருக்குறளும் முற்றோதல் செய்ய ஆயத்தமான நிலையில் இருக்கிறார்கள்,தமிழ் வளர்ச்சித் துறையில் பதிவு செய்துள்ளார்கள். இன்னும் திறனறித்தேர்வுக்கான நாள் குறிப்பிடப்படவில்லை.
    அடுத்த ஆண்டுக்கு 133 பேரை இலக்காகக் கொண்டு செயல்படுவதாக கூறினார்
  • திருமதி சங்கீதா கண்ணன் தற்போது ஆறு பேர் பத்து அதிகாரமும் நான்கு பேர் 20 அதிகாரமும் சொல்லும் திறன் பெற்றவர்களாக இருக்கிறார்கள் .அனைவரும் வீட்டுக்கு அருகிலேயே இருக்கிறார்கள் என்று கூறினார் மேலும் இரண்டு பள்ளிக்கூடங்களை அணுகத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.தமிழ் வளர்ச்சித் துறையோடு எவ்வாறு தொடர்பு கொள்வது என்பதை பற்றி பழனி விளக்கி கூறினார்
  • இந்த மாதம் சிஇஓ கூட்டத்தில் பள்ளி கல்வி இயக்குனர் அனுமதி பெற்று ஒரு 20 நிமிடம் உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் பற்றி எடுத்துரைக்க வேண்டும் அதற்கு ஆவன செய்ய வேண்டும்

எடுக்கப்பட்ட சில முடிவுகள்:

  • திருக்குறள் நூல்களை பள்ளி மாணவர்களுக்கு வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.பல்வேறு மாவட்ட கல்வி அலுவலர்களுடன் பயிற்சி ஆசிரியர்கள் அணுக்கமாக செயல்பட்டு குறைந்தது பத்து அதிகாரமாவது சொல்லும் திறன் படைத்த மாணவர்களுக்கு திருக்குறள் நூல் வழங்கலாம்
  • நூல் வழங்கும் விழாக்கள் மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்டத் தலைமை கல்வி அதிகாரி இவர்கள் தலைமையில் நடத்தினால் சிறப்பாக இருக்கும்
  • உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் சார்பாக பத்து அதிகாரங்கள் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழும் அதைத்தொடர்ந்து 50 அதிகாரங்கள் 100 அதிகாரங்கள் 133அதிகாரங்கள் முடித்தவர்களுக்கு திருக்குறள் திலகம் என்றசான்றிதழும் வழங்கலாம்
  • மேலும் புரவலர்களை இனம் காண வேண்டும்
  • தமிழ் வளர்ச்சித் துறை மாவட்டம் தோறும் பொறுப்பு அதிகாரிகளின் பெயர் எண் பெற வேண்டும்

சில தகவல்கள்

  • திருக்குறள் முற்றோதல் பயிற்சி ஆண்டு ஜனவரி தொடங்கி டிசம்பரில் முடிய வேண்டும். உரிய நேரத்தை ஒதுக்கினால் ஐந்து அல்லது ஆறு மாதங்களில் 500 குறள்களை சொல்லும் திறன் பெற்றுவிடுவார்கள் ...பிறகு இரண்டு மாதத்தில் ஆயிரம் குறளும்அதற்கு மேல் இரண்டு மாதத்தில் 1330 குறளும் சொல்லும் ஆற்றல் பெற்று விடுவார்கள். 2 மாதங்கள் மீண்டும் மீண்டும் மனனப் பயிற்சி அளிக்க வேண்டும்
  • முற்றோதல்பயிற்சி ஆசிரியர்கள் பயிற்சி பெற்ற மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்யும் முன் ,அல்லது திருவள்ளுவர் தினத்தன்று தங்களது கைப் பொருள் செலவில், நல்ல மனம் படைத்தவர்களின் உதவியுடன் விழா நடத்துகிறார்கள் திரு கோபி சிங் அய்யா அவர்கள் 48 குழந்தைகள் வைத்து இந்த ஆண்டு தஞ்சையில் பெரும் விழாவாக நடத்த திட்டமிட்டுள்ளார்
  • ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் திருக்குறள் முற்றோதல் செய்யும் குடும்பம் தஞ்சையில் உள்ளது அவர்களுக்கு உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பாக சிறப்பு செய்ய வேண்டும் என்று பழனி கூறினார்

அனைவருக்கும் நன்றி கூறி கலந்தாய்வு கூட்டம் நிறைவு செய்யப்பட்டது

(தமிழ் மகிழ்நன்,கற்பகவல்லி இருவரும் கலந்து கொள்ள இயலவில்லை ..., வள்ளுவச்செல்வனுக்கு உரிய நேரத்தில் தகவல் அளிக்கத் தவறி விட்டேன்.தமிழ் குழவி விஸ்வநாதன் அவர்களை கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுகிறேன்)

by Swathi   on 14 Jan 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது. அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது.
திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள் திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள்
மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் 	வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.