*நவில்தொறும் நூல்நயம்* வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-14
*நாள்: 26/05/2023 வெள்ளிக்கிழமை* நேரம்: மாலை 6:30-07:45 மணி
*நூல்: திருக்குறள் களஞ்சியம் (10 தொகுதிகள்)* தொகுப்பாசிரியர்: பேராசிரியர் அரங்க ராமலிங்கம்
வீரமாமுனிவர் தொடங்கி இன்று வாழும் பலர் உட்பட, சான்றோர்-படைப்பாளிகள் பெருமக்களின், 125 திருக்குறள் சார்ந்த கட்டுரைகள் படைப்புகள் கால வரிசைப்படி பத்து தொகுதிகளாக தொகுப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னைத் தமிழ்துறைத்தலைவர், பேராசிரியர் அரங்க ராமலிங்கம் தொகுப்பாசிரியராக இருந்து இந்த அரும்பணியை செய்துள்ளார். இந்தத் தொகுப்பில், நாட்டுடைமையாக்கப்பட் திருக்குறள் நூல்களும் இடம்பெற்றுள்ளன. தொகுப்பை முழுமையாக வாசிக்கும்போது, திருக்குறள் கருத்தியல்கள் காலந்தோறும் உருமாற்றம் பெற்று வருவதை உணர இயலும். 5,000 பக்கங்களுக்கு மேல் உள்ள இத்தொகை நூல், திருக்குறள் ஆய்வாளர்களுக்கு பெருந்துணையாக இருக்கும். வர்த்தமானர் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது (2022).
*நூல் அறிமுகம் செய்வார்: பேரா அரங்க ராமலிங்கம்*
நூலின் தொழுப்பாசிரியரே நூல் அறிமுகம் செய்கிறார். பேராசிரியர் அரங்க ராமலிங்கம் அவர்கள் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை, முதுகலை (1971-1976) பயின்றவர் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் (1977-1982) பட்டம் பெற்றவர். பல்வேறு அரசு கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றி இருக்கிறார். சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னைத் தமிழ்துறைத்தலைவர். சர்வதேச அரங்குகள் பலவற்றில் தன்னுடைய ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். 25க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். சித்தர் நோக்கில் சைவ நெறி, சித்தர் வழி, முருக பக்தி, தெய்வச்சேக்கிழார், வ.உ.சி. கண்ட மெய்பொருள், திருவள்ளுவர் இறைநெறி மற்றும் தெய்வப்புலவர் திருவாய்மொழி, ஆகியன இவரது குறிப்பிடத்தக்க நூல்களாகும். இலக்கியச் செம்மல், திருத்தொண்டர் மாமணி மற்றும் தமிழ்வாகைச் செம்மல், இவர் பெற்ற விருதுகளில் சிலவாகும். ஆன்மீகச் சொற்பொழிவாளராகவும் அறியப்படுகிறார்.
|