நவில்தொறும் நூல்நயம் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-3
10/03/2023 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி
நூற்குறிப்பு
நூல்: திருக்குறள்-மூலமும் விளக்க உரையும் நூலாசிரியர்: புலவர் நன்னன்
உரையாசிரியர்கள் யாவரும் தத்தமக்கேற்ற வகையில் உரையெழுதியுள்ளனர் எனக்கருதி "திருவள்ளுவர் கருத்து யாது என்பதைத் திருக்குறள் பாக்களின் வாயிலாக மட்டுமே தெரிந்து கொள்ளும்" முயற்சியை நன்னன் மேற்கொள்கிறார். அவரது பதிப்பில் சிதைவிலா மூலபாடம், உரைநடை வடிவிலாகிய மூலபாடம், சொற்பொருள், இன்றியமையா விளக்கவுரை, கருத்துரை எனும் ஐந்து வகைமுறை பின்பற்றப்பட்டுள்ளது". வெண்பா, தமிழ்ப் புணர்ச்சிமுறை ஆகியவற்றுக்குச் சிறிதும் பழுதுநேராமல் முடிந்தவரை மூலபாடத்தைப் பொன்னேபோல் போற்றி" ஆண்டுள்ளதாகவும் "மூலபாடத்தில் கைவைக்கக்கூடாது" என்றும் புலவர் நன்னன் தெரிவிக்கிறார். பக்கம்: 672 விலை: ரூ. 295/- ஏகம் பதிப்பகம், ஸ்ரீ அலமு புத்தக நிலையம், திருவல்லிக்கேணி,சென்னை. பேசி : 044-2852 9194, 94449 09194
நூல் அறிமுகம் செய்வார் குறிப்பு தமிழ் இயலன் என்கிற திரு ச. தனசேகரன் பொறியியல் படித்த தமிழறிஞர். தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழிகளிலும் பட்டம் பெற்றவர். கலை, இலக்கியம், மேலாண்மை என்று பல துறைகளில் தடம் பதித்த பன்முகத்திறனாளர். தாராபாரதி விருது, தமிழ்ப்பணிச் செம்மல் விருது ஆயிரத்துக்கும்மேற்பட்ட இணையவழி நிகழ்ச்சிகளை நடத்தி “இணையத் தேனீ” என்னும் பட்டம் பெற்றவர். ‘செறிவு’, ‘பயணத்திசை’, ‘தேடித் திரிகையில்’ போன்ற கவிதைத் தொகுதிகளை எழுதியுள்ளார்.
தமிழ் இலக்கண இலக்கிய வகுப்புகளை திறம்பட நடத்தும் பேராசிரியர். இவர் அண்மையில் கிண்டி பொறியியற் கல்லூரியில் தமிழ்த் துறை தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.
|