LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் செய்திகள் (Thirukkural News )

8 நிமிடத்தில் 110 திருக்குறள்களை ஒப்புவித்து தஞ்சாவூர் சிறுவன் சாதனை

 

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியை சேர்ந்தர் சிறுவன் சாதவ். தனியார் பள்ளியில் எல்.கே.ஜி.யில் சேர்ந்தபோதே புத்தகங்கள் மீது அதிக ஈடுபாடு       கொண்டவராக திகழ்ந்துள்ளார். அதனால், கல்வி கற்பதில் மட்டுமின்றி திருக்குறள் கற்பதிலும் அதீத ஆர்வம்        காட்டியுள்ளார். இவரது பெற்றோர் திருக்குறளை     சொல்லிக்கொடுக்க  தொடங்கியதும் அதை ஆர்வமாக மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதை அறிந்த பெற்றோர் அவருக்கு மேலும் பல குறள்களை சொல்லிக்  கொடுக்க  தொடங்கினர்.
***************************
திறமையை வளர்த்துக்கொண்டார்
*******************************
தற்போது யூகேஜி படித்து வரும் அவருக்கு ஆசிரியர்கள் திருக்குறளை சொல்லிக்கொடுத்ததோடு வீட்டிலும்    பெற்றோர் பயிற்சி அளித்தனர். அதன்விளைவாக  மனப்பாடம் செய்த குறள்களை கிடுகிடுவென ஒப்புவிக்கவும் தொடங்கினார் சாதவ். 
**********************
கிட்டத்தட்ட 8 நிமிடங்களில் 110 திருக்குறள்களை  மனப்பாடமாக ஒப்புவிக்கும் திறமையை அவர் வளர்த்துக்கொண்டார்.  இந்த திறமை அவரது       பெற்றோறை மட்டுமின்றி, ஆசிரியர்களையும் ஆச்சரியப்படுத்தியது.
***************** 
சிறுவனின் இந்த திறமையை உலகறிய செய்யவேண்டும் என பெற்றோர் முயற்சி செய்தனர். அதற்கான       சந்தர்ப்பம் தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில்   அமைந்தது. சோழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற உலக சாதனை புத்தகத்தின் நிர்வாகிகள் மற்றும் மேயர் ராமநாதன் முன்னிலையில் திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டிக்குதயாரானார் நான்கரை வயதான சாதவ்.
***************************************
காலத்தில் 1330 குறள்களையும் முற்றோதல் 
****************
குறித்தபடி, அறிவித்தபடி கிட்டத்தட்ட 8 நிமிடங்களில் 110 திருக்குறள்களை மழலை மொழியில் அச்சுபிசகாமல் ஒப்புவித்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இவருக்கு உலக சாதனை புத்தகத்துகத்தில் இடம் பிடித்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டதோடு, பல்வேறு தரப்பினரின் பாராட்டும் கிடைத்தது.
*******************************
தொடர்ந்து சிறுவனுக்கு பயிற்சிகள் வழங்கினால் வரும்   காலத்தில் 1330 குறள்களையும் முற்றோதல் செய்யும் திறனை வளர்க்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியை சேர்ந்தர் சிறுவன் சாதவ். தனியார் பள்ளியில் எல்.கே.ஜி.யில் சேர்ந்தபோதே புத்தகங்கள் மீது அதிக ஈடுபாடு       கொண்டவராக திகழ்ந்துள்ளார். அதனால், கல்வி கற்பதில் மட்டுமின்றி திருக்குறள் கற்பதிலும் அதீத ஆர்வம்        காட்டியுள்ளார். இவரது பெற்றோர் திருக்குறளை     சொல்லிக்கொடுக்க  தொடங்கியதும் அதை ஆர்வமாக மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதை அறிந்த பெற்றோர் அவருக்கு மேலும் பல குறள்களை சொல்லிக்  கொடுக்க  தொடங்கினர்.

திறமையை வளர்த்துக்கொண்டார்

தற்போது யூகேஜி படித்து வரும் அவருக்கு ஆசிரியர்கள் திருக்குறளை சொல்லிக்கொடுத்ததோடு வீட்டிலும்    பெற்றோர் பயிற்சி அளித்தனர். அதன்விளைவாக  மனப்பாடம் செய்த குறள்களை கிடுகிடுவென ஒப்புவிக்கவும் தொடங்கினார் சாதவ். 

கிட்டத்தட்ட 8 நிமிடங்களில் 110 திருக்குறள்களை  மனப்பாடமாக ஒப்புவிக்கும் திறமையை அவர் வளர்த்துக்கொண்டார்.  இந்த திறமை அவரது       பெற்றோறை மட்டுமின்றி, ஆசிரியர்களையும் ஆச்சரியப்படுத்தியது.

சிறுவனின் இந்த திறமையை உலகறிய செய்யவேண்டும் என பெற்றோர் முயற்சி செய்தனர். அதற்கான       சந்தர்ப்பம் தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில்   அமைந்தது. சோழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற உலக சாதனை புத்தகத்தின் நிர்வாகிகள் மற்றும் மேயர் ராமநாதன் முன்னிலையில் திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டிக்குதயாரானார் நான்கரை வயதான சாதவ்.

காலத்தில் 1330 குறள்களையும் முற்றோதல் 

குறித்தபடி, அறிவித்தபடி கிட்டத்தட்ட 8 நிமிடங்களில் 110 திருக்குறள்களை மழலை மொழியில் அச்சுபிசகாமல் ஒப்புவித்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இவருக்கு உலக சாதனை புத்தகத்துகத்தில் இடம் பிடித்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டதோடு, பல்வேறு தரப்பினரின் பாராட்டும் கிடைத்தது.

தொடர்ந்து சிறுவனுக்கு பயிற்சிகள் வழங்கினால் வரும்   காலத்தில் 1330 குறள்களையும் முற்றோதல் செய்யும் திறனை வளர்க்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

by Kumar   on 12 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது. அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது.
திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள் திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள்
மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் 	வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.