|
||||||||
8 நிமிடத்தில் 110 திருக்குறள்களை ஒப்புவித்து தஞ்சாவூர் சிறுவன் சாதனை |
||||||||
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியை சேர்ந்தர் சிறுவன் சாதவ். தனியார் பள்ளியில் எல்.கே.ஜி.யில் சேர்ந்தபோதே புத்தகங்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டவராக திகழ்ந்துள்ளார். அதனால், கல்வி கற்பதில் மட்டுமின்றி திருக்குறள் கற்பதிலும் அதீத ஆர்வம் காட்டியுள்ளார். இவரது பெற்றோர் திருக்குறளை சொல்லிக்கொடுக்க தொடங்கியதும் அதை ஆர்வமாக மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதை அறிந்த பெற்றோர் அவருக்கு மேலும் பல குறள்களை சொல்லிக் கொடுக்க தொடங்கினர்.
***************************
திறமையை வளர்த்துக்கொண்டார்
*******************************
தற்போது யூகேஜி படித்து வரும் அவருக்கு ஆசிரியர்கள் திருக்குறளை சொல்லிக்கொடுத்ததோடு வீட்டிலும் பெற்றோர் பயிற்சி அளித்தனர். அதன்விளைவாக மனப்பாடம் செய்த குறள்களை கிடுகிடுவென ஒப்புவிக்கவும் தொடங்கினார் சாதவ்.
**********************
கிட்டத்தட்ட 8 நிமிடங்களில் 110 திருக்குறள்களை மனப்பாடமாக ஒப்புவிக்கும் திறமையை அவர் வளர்த்துக்கொண்டார். இந்த திறமை அவரது பெற்றோறை மட்டுமின்றி, ஆசிரியர்களையும் ஆச்சரியப்படுத்தியது.
*****************
சிறுவனின் இந்த திறமையை உலகறிய செய்யவேண்டும் என பெற்றோர் முயற்சி செய்தனர். அதற்கான சந்தர்ப்பம் தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்தது. சோழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற உலக சாதனை புத்தகத்தின் நிர்வாகிகள் மற்றும் மேயர் ராமநாதன் முன்னிலையில் திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டிக்குதயாரானார் நான்கரை வயதான சாதவ்.
***************************************
காலத்தில் 1330 குறள்களையும் முற்றோதல்
****************
குறித்தபடி, அறிவித்தபடி கிட்டத்தட்ட 8 நிமிடங்களில் 110 திருக்குறள்களை மழலை மொழியில் அச்சுபிசகாமல் ஒப்புவித்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இவருக்கு உலக சாதனை புத்தகத்துகத்தில் இடம் பிடித்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டதோடு, பல்வேறு தரப்பினரின் பாராட்டும் கிடைத்தது.
*******************************
தொடர்ந்து சிறுவனுக்கு பயிற்சிகள் வழங்கினால் வரும் காலத்தில் 1330 குறள்களையும் முற்றோதல் செய்யும் திறனை வளர்க்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியை சேர்ந்தர் சிறுவன் சாதவ். தனியார் பள்ளியில் எல்.கே.ஜி.யில் சேர்ந்தபோதே புத்தகங்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டவராக திகழ்ந்துள்ளார். அதனால், கல்வி கற்பதில் மட்டுமின்றி திருக்குறள் கற்பதிலும் அதீத ஆர்வம் காட்டியுள்ளார். இவரது பெற்றோர் திருக்குறளை சொல்லிக்கொடுக்க தொடங்கியதும் அதை ஆர்வமாக மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதை அறிந்த பெற்றோர் அவருக்கு மேலும் பல குறள்களை சொல்லிக் கொடுக்க தொடங்கினர். திறமையை வளர்த்துக்கொண்டார் தற்போது யூகேஜி படித்து வரும் அவருக்கு ஆசிரியர்கள் திருக்குறளை சொல்லிக்கொடுத்ததோடு வீட்டிலும் பெற்றோர் பயிற்சி அளித்தனர். அதன்விளைவாக மனப்பாடம் செய்த குறள்களை கிடுகிடுவென ஒப்புவிக்கவும் தொடங்கினார் சாதவ். கிட்டத்தட்ட 8 நிமிடங்களில் 110 திருக்குறள்களை மனப்பாடமாக ஒப்புவிக்கும் திறமையை அவர் வளர்த்துக்கொண்டார். இந்த திறமை அவரது பெற்றோறை மட்டுமின்றி, ஆசிரியர்களையும் ஆச்சரியப்படுத்தியது. சிறுவனின் இந்த திறமையை உலகறிய செய்யவேண்டும் என பெற்றோர் முயற்சி செய்தனர். அதற்கான சந்தர்ப்பம் தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்தது. சோழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற உலக சாதனை புத்தகத்தின் நிர்வாகிகள் மற்றும் மேயர் ராமநாதன் முன்னிலையில் திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டிக்குதயாரானார் நான்கரை வயதான சாதவ். காலத்தில் 1330 குறள்களையும் முற்றோதல் குறித்தபடி, அறிவித்தபடி கிட்டத்தட்ட 8 நிமிடங்களில் 110 திருக்குறள்களை மழலை மொழியில் அச்சுபிசகாமல் ஒப்புவித்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இவருக்கு உலக சாதனை புத்தகத்துகத்தில் இடம் பிடித்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டதோடு, பல்வேறு தரப்பினரின் பாராட்டும் கிடைத்தது. தொடர்ந்து சிறுவனுக்கு பயிற்சிகள் வழங்கினால் வரும் காலத்தில் 1330 குறள்களையும் முற்றோதல் செய்யும் திறனை வளர்க்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். |
||||||||
by Kumar on 12 Dec 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|