|
||||||||
முகநூலை முகநூல் என்றும் சொல்லலாம். முகனூல் என்றும் சொல்லலாம்.. |
||||||||
முகநூல் என்பதை எவ்வளவு துல்லியமாக உச்சரிக்க முயன்றாலும் அது ‘முகனூல்’ என்றே ஒலிக்கும். ஏன் ?
முகம்+நூல், முகம் என்பதில் உள்ள மகர ஈற்று மெய் ‘ம்’ கெட்டு முகநூல் (முகநக நட்பது, முகவரி) என்று புணர்வதுதானே சரி ? முகனூல் எப்படிச் சரியாகும் ? நல்ல கேள்வி.
மகர ஈற்று மெய் - ‘ம்’ என்று முடியும் பெயர்ச்சொற்களில் ம் என்ற எழுத்துக்குப் பதிலாக ன் என்ற மெய்யெழுத்து இடம்பெறும். நலம் என்பதை நலன் எனலாம், திறம் என்பதைத் திறன் எனலாம், வளம் என்பதை வளன் எனலாம், கலம் என்பதைக் கலன் எனலாம். அதுபோலவே முகம் என்பதை முகன் எனலாம்.
சொல்லின் கடைசி எழுத்தாக இருக்கவேண்டியதற்கு மாற்றாக வேறு எழுத்து இடம்பெற்றால் அது கடைப்போலி எனப்படும். முகத்திற்குக் கடைப்போலியான முகன் என்ற சொல்லோடு நூல் சேர்ந்தால் என்னவாகும் ? முகன் + நூல் = முகனூல். (தன்+நலம் = தன்னலம் ஆவதுபோல).
பின்குறிப்பு : நான் பேஸ்புக் என்றேதான் சொல்வேன் என்பவர்களுக்கு இச்செய்தி மறைந்து தோன்றட்டும் !
நன்றி : கவிஞர் மகுடேசுவரன்
முகநூல் என்பதை எவ்வளவு துல்லியமாக உச்சரிக்க முயன்றாலும் அது ‘முகனூல்’ என்றே ஒலிக்கும். ஏன் ? முகம்+நூல், முகம் என்பதில் உள்ள மகர ஈற்று மெய் ‘ம்’ கெட்டு முகநூல் (முகநக நட்பது, முகவரி) என்று புணர்வதுதானே சரி ? முகனூல் எப்படிச் சரியாகும் ? நல்ல கேள்வி. மகர ஈற்று மெய் - ‘ம்’ என்று முடியும் பெயர்ச்சொற்களில் ம் என்ற எழுத்துக்குப் பதிலாக ன் என்ற மெய்யெழுத்து இடம்பெறும். நலம் என்பதை நலன் எனலாம், திறம் என்பதைத் திறன் எனலாம், வளம் என்பதை வளன் எனலாம், கலம் என்பதைக் கலன் எனலாம். அதுபோலவே முகம் என்பதை முகன் எனலாம். சொல்லின் கடைசி எழுத்தாக இருக்கவேண்டியதற்கு மாற்றாக வேறு எழுத்து இடம்பெற்றால் அது கடைப்போலி எனப்படும். முகத்திற்குக் கடைப்போலியான முகன் என்ற சொல்லோடு நூல் சேர்ந்தால் என்னவாகும் ? முகன் + நூல் = முகனூல். (தன்+நலம் = தன்னலம் ஆவதுபோல). பின்குறிப்பு : நான் பேஸ்புக் என்றேதான் சொல்வேன் என்பவர்களுக்கு இச்செய்தி மறைந்து தோன்றட்டும் ! நன்றி : கவிஞர் மகுடேசுவரன்
|
||||||||
by Swathi on 26 Nov 2014 2 Comments | ||||||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|